அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
இன்றும், நாளையும் கோவை, நீலகிரிக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை
தமிழகத்தில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வியாழன், வெள்ளி (ஜூன் 12, 13) ஆகிய இரு நாள்கள் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, வியாழக்கிழமை (ஜூன் 12) முதல் ஜூன் 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஆரஞ்ச் எச்சரிக்கை: வியாழக்கிழமை (ஜூன் 12) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும், ஜூன் 13-இல் கோவை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வியாழக்கிழமை (ஜூன் 12) முதல் ஜூன் 17 வரை கேரள எல்லையையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 12) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
2 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் புதன்கிழமை பரவலாக மழை பெய்ததால், மதுரை விமான நிலையம் (103.1 டிகிரி), தூத்துக்குடி (100.04 டிகிரி ) ஆகிய 2 இடங்களை தவிர எந்த இடத்திலும் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகவில்லை.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, வியாழக்கிழமை (ஜூன் 12) முதல் ஜூன் 15 வரை தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இதனால், மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.