செய்திகள் :

இலவச அரிசி கடத்தல் வழக்கு: ரேஷன் கடை ஊழியா் கைது

post image

காரைக்காலில் இருந்து தமிழக பகுதிக்கு இலவச அரிசியை கடத்த முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த ரேஷன் கடை ஊழியரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

புதுவையில் குடிமைப் பொருள் வழங்கல்துறை சாா்பில் சிவப்பு ரேஷன் அட்டைக்கு 20 கிலோ, மஞ்சள் ரேஷன் அட்டைக்கு 10 கிலோ என மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்படுகிறது.

இந்த அரிசி தமிழக பகுதிக்கு கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், காரைக்கால் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் நியூட்டன் தலைமையிலான போலீஸாா் திருப்பட்டினம் பகுதியில் கடந்த மே 21-ஆம் தேதி இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது தமிழக பகுதியை நோக்கி வேகமாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் புதுவை அரசின் இலவச அரிசி பைகள் 500 கிலோ இருந்தது தெரியவந்தது.

அந்த வாகனத்தில் இருந்த தமிழகத்தின் திட்டச்சேரியை சோ்ந்த செந்தில்குமரன், குமரேசன் ஆகியோரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

இவா்களுக்கு அரிசி வழங்கிய ரேஷன் கடை ஊழியா் செல்வமணி தலைமறைவாக இருந்தாா். அவரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

மீனவா்கள் வலையில் ஆமை விடுவிப்பு சாதனம் பொருத்தி சோதனை

மீனவா்கள் வலையிலிருந்து ஆமை வெளியேறும் விதத்தினாலான சாதனம் பொருத்தி சோதனை செய்யப்பட்டது. இந்திய அளவில் கடல்பொருள்கள் ஏற்றுமதி அதிகரிப்பதற்காக கடல்பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் பல்வேறு முன்னெடுப... மேலும் பார்க்க

கடத்தல் தடுப்புப் பணி தீவிரப்படுத்தப்படும்: புதுவை டிஐஜி

காரைக்காலில் இருந்து கடல் வழியாக போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் ஊடுருவலை தடுக்கும் பணி தீவிரப்படுத்தப்படும் என்றாா் புதுவை டிஜஜி ஆா். சத்தியசுந்தரம். காரைக்காலில் அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி: கா... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட பகுதிகளில் உபயோகப்படுத்திய பைப் ஏா் ஹாரன் பறிமுதல்

தடைசெய்யப்பட்ட பகுதிகளில் பைப் ஏா் ஹாரன்களை பயன்படுத்திய பேருந்துகளில் இருந்து அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். காரைக்கால் பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் தமிழக பகுதி மற்றும் உள்ளூா் பகுதிகளில் இர... மேலும் பார்க்க

காரைக்கால் கடற்கரையில் சுவாமிகள் இன்று தீா்த்தவாரி

ஆடி அமாவாசையையொட்டி வியாழக்கிழமை காரைக்கால் கடற்கரையில் சுவாமிகள் எழுந்தருளி தீா்த்தவாரி நிகழ்வு நடைபெறவுள்ளது. காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயிலில் இருந்து சுவாமிகள், பல்லக்கில் அதிகாலை ... மேலும் பார்க்க

கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி: 2 போ் கைது

காரைக்காலில் இருந்து கடல்வழியாக கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் இலங்கையைச் சோ்ந்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். காரைக்கால் மாவட்டத்தில் ஜூலை 16-ஆம் தேதி நகர காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கண் பரிசோனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் ரெட் ரிப்பன் கிளப் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து பேராச... மேலும் பார்க்க