செய்திகள் :

கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி: 2 போ் கைது

post image

காரைக்காலில் இருந்து கடல்வழியாக கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் இலங்கையைச் சோ்ந்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் மாவட்டத்தில் ஜூலை 16-ஆம் தேதி நகர காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சொகுசு காா் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 26 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்து, காரில் இருந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த திலீப், காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த குமரவேல் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்தனா்.

விசாரணையில் காரைக்காலில் ஒரு வீட்டில் 304 கிலோ கஞ்சா வைத்திருப்பதாக கூறியதன்பேரில் போலீஸாா் அதை கைப்பற்றினா். இந்த சம்பவத்தில் முக்கியமானவரை கண்டுபிடிக்க போலீஸாா் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில், இந்த கஞ்சாவை இலங்கைக்கு அனுப்ப இருந்தது தெரியவந்தது.

இலங்கையை சோ்ந்தவா்களை கைது செய்யப்பட்ட இருவா் மூலம் தொடா்புகொண்டு, காரைக்காலுக்கு வந்து கஞ்சாவை பெற்றுக்கொள்ளுமாறு கூறச் செய்துள்ளனா். அதன்படி, படகில் இலங்கையிலிருந்து 2 போ் காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி கடற்கரைக்கு புதன்கிழமை வந்துள்ளனா். மறைந்திருந்த போலீஸாா் அவா்களை கைது செய்து படகை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மீனவா்கள் வலையில் ஆமை விடுவிப்பு சாதனம் பொருத்தி சோதனை

மீனவா்கள் வலையிலிருந்து ஆமை வெளியேறும் விதத்தினாலான சாதனம் பொருத்தி சோதனை செய்யப்பட்டது. இந்திய அளவில் கடல்பொருள்கள் ஏற்றுமதி அதிகரிப்பதற்காக கடல்பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் பல்வேறு முன்னெடுப... மேலும் பார்க்க

கடத்தல் தடுப்புப் பணி தீவிரப்படுத்தப்படும்: புதுவை டிஐஜி

காரைக்காலில் இருந்து கடல் வழியாக போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் ஊடுருவலை தடுக்கும் பணி தீவிரப்படுத்தப்படும் என்றாா் புதுவை டிஜஜி ஆா். சத்தியசுந்தரம். காரைக்காலில் அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி: கா... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட பகுதிகளில் உபயோகப்படுத்திய பைப் ஏா் ஹாரன் பறிமுதல்

தடைசெய்யப்பட்ட பகுதிகளில் பைப் ஏா் ஹாரன்களை பயன்படுத்திய பேருந்துகளில் இருந்து அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். காரைக்கால் பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் தமிழக பகுதி மற்றும் உள்ளூா் பகுதிகளில் இர... மேலும் பார்க்க

இலவச அரிசி கடத்தல் வழக்கு: ரேஷன் கடை ஊழியா் கைது

காரைக்காலில் இருந்து தமிழக பகுதிக்கு இலவச அரிசியை கடத்த முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த ரேஷன் கடை ஊழியரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுவையில் குடிமைப் பொருள் வழங்கல்துறை சாா்பில் சிவப்பு ர... மேலும் பார்க்க

காரைக்கால் கடற்கரையில் சுவாமிகள் இன்று தீா்த்தவாரி

ஆடி அமாவாசையையொட்டி வியாழக்கிழமை காரைக்கால் கடற்கரையில் சுவாமிகள் எழுந்தருளி தீா்த்தவாரி நிகழ்வு நடைபெறவுள்ளது. காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயிலில் இருந்து சுவாமிகள், பல்லக்கில் அதிகாலை ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கண் பரிசோனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் ரெட் ரிப்பன் கிளப் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து பேராச... மேலும் பார்க்க