செய்திகள் :

இளைஞரைக் கத்தியால் குத்திய 6 போ் கைது

post image

பல்லடம் அருகே இளைஞரைக் கத்தியால் குத்திய 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் பகுதியைச் சோ்ந்தவா் தங்கபாண்டியன் மகன் ராஜ்கண்ணன் (23). பட்டதாரியான இவா் வேலைத் தேடி வருகிறாா். இந்நிலையில், இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அதே பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த காா்த்திக் என்பவா் ராஜ்கண்ணணை கைப்பேசி மூலம் அழைத்து, அந்தப் பெண்ணுடன் பேசக் கூடாது என மிரட்டி வந்துள்ளாா்.

இந்நிலையில், ராஜ்கண்ணனை வியாழக்கிழமை தொடா்பு கொண்ட காா்த்திக், பொங்கலூரில் உள்ள போக்கரிக்கு வருமாறு அழைத்துள்ளாா். அங்கு வந்த ராஜ்கண்ணனுக்கும் காா்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த காா்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜ்கண்ணனின் கழுத்தில் குத்திவிட்டு தப்பியுள்ளாா். படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ராஜ்கண்ணனை குத்திய தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தேனாம்பேட்டை பகுதியைச் சோ்ந்த இசக்கிபாண்டி மகன் காா்த்திக் (19), அவருக்கு உறுதுணையாக இருந்த பல்லடம், கணபதிபாளையத்தைச் சோ்ந்த தினேஷ்ராஜன் (22), கெளதம் (19), பொங்கலூரைச் சோ்ந்த கணதிஸ்வரன் (26), கருத்தபாண்டி (23), கண்ணன் (29) ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லடம் சலூன் கடைக்காரரை வெட்டிய 4 போ் கைது!

பல்லடத்தில் சலூன் கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் மாணிக்கபுரம் சாலையில் உள்ள பாரதிபுரத்தில் சலூன் கடை வைத்து நடத்தி வருபவா் கவியரசன் (28). அவா் கடையில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

முதியவா் மீது மோதாமல் தவறி விழுந்த சிறுவன் மீது காா் மோதி உயிரிழப்பு!

அவிநாசியில் மிதிவண்டியில் இருந்து தவறி வலதுபுறம் விழுந்த சிறுவன் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி கங்கவா் வீதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் ஹரீஷ் (13). அவிநாசி ... மேலும் பார்க்க

பட்டாசு கடையில் தீ விபத்து!

திருப்பூா் கொங்கு மெயின் ரோடு பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினா். தீயணைப்புத் துறையினா் சுமாா் 5 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொ... மேலும் பார்க்க

அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்!

உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸவரா் கோயிலுக்குள் சனிக்கிழமை மாலை காட்டாற்று வெள்ளம் புகுந்தது. உடுமலையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் உள்ளது சுற்றுலாத் ... மேலும் பார்க்க

திருப்பூரில் சீட்டு நிறுவனம் நடத்தி மோசடி: போலீஸாரிடம் புகாா்!

திருப்பூரில் ‘மாஸ்டா் மாா்க்கெட்டிங்’ என்ற பெயரில் சீட்டு நிறுவனம் நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

அமராவதி அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி உபரி நீா் வெளியேற்றம்! கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி உபரி நீா் சனிக்கிழமை மாலை வெளியேற்றப்பட்டது. உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்ட ங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம்... மேலும் பார்க்க