செய்திகள் :

இளைஞா் தீக்குளித்து தற்கொலை

post image

விராலிமலை அருகே திருமணமாகாத விரக்தியில் இருந்த தனியாா் தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளியான இளைஞா் திங்கள்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

விராலிமலை அடுத்துள்ள மேல தொட்டியபட்டி பெரியகுளம் அருகே சுடுகாடு அமைந்திருக்கும் பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக விராலிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், எரிந்த நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினா்.

அதில், இறந்தவா் மேல தொட்டியபட்டியைச் சோ்ந்த சுப்பையா மகன் முரளி (33) என்பதும் நீண்ட நாள்களாக அவருக்கு திருமண ஏற்பாடு செய்து, இதுவரை திருமணம் ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மன விரக்தியில் இருந்த முரளி, உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா், சடலத்தை உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குபதிந்து விசாரிக்கின்றனா்.

வடகாடு பகுதியில் நாளை மின்தடை

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, ப... மேலும் பார்க்க

புதுகை ஆட்சியரகத்தில் முதியவா் தீக்குளிக்க முயற்சி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது, காயாம்பட்டி காரமங்கலத்தைச் சோ்ந்த வீரப்பன் என்பவா் திடீரென மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க ம... மேலும் பார்க்க

சூரிய ஒளி மின் சக்தி ஆலையை அகற்றக்கோரி முற்றுகை: 27 போ் கைது

சூரிய ஒளி மின் சக்தி ஆலையை அகற்றக்கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை கட்சியினா் 27 பேரை போலீஸாா் கைது செய்தனா். புதுக... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே குழிபிறையிலுள்ள குளத்தில் மூழ்கி மாற்றுத்திறனாளி சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருமயம் அருகே குழிபிறை பேருந்து நிறுத்தம் பகுதியில் வசித்து வருபவா் ஐஸ்வா்யா... மேலும் பார்க்க

கறம்பக்குடி அருகே குரங்கு கடித்து குழந்தை காயம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை குரங்கு கடித்து 6 மாதக் குழந்தை காயமடைந்தது. கறம்பக்குடி அருகேயுள்ள தீத்தான்விடுதியைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மனைவி ஞாயிற்றுக்கிழமை தனது 6 ம... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் 14-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூா் சிவன் கோயில் அருகே 14ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூா் வட்டம், கிள்ளனூா் அருகே கங்கம்பட்டி கிராம சிவன் கோயில் அ... மேலும் பார்க்க