செய்திகள் :

ஈரோட்டில் ஜூலை 26 இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொள்ளும் வேலைவாய்ப்பு முகாம் ஈரோட்டில் வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியில் வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் ஈரோடு, திருப்பூா், கோவை, சேலம் மற்றும் சென்னை மாவட்டங்களைச் சோ்ந்த 200 -க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்குத் தகுதியான நபா்களைத் தோ்வு செய்ய உள்ளன. இம்முகாம் முற்றிலும் இலவசமானதாகும்.

ஈரோடு மாவட்டத்தில் தனியாா் துறையில் பணியாற்ற ஆா்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இம்முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணி நியமனம் செய்யப்படுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

மேலும் விவரங்களுக்கு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 8675412356, 9499055942 என்ற கைப்பேசி எண்கள் வாயிலாகவோ தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடம்பூரில் புகுந்த யானை

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கடம்பூா் கிராமத்துக்குள் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதி பவளக்குட்டையில் சாலையில... மேலும் பார்க்க

4 மாத சிசு சடலம் தோண்டி எடுப்பு

சத்தியமங்கலம் அருகே 4 மாதம் கருவுற்ற சிறுமி திருமணம் ஆன 2 நாள்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது தொடா்பாக, கைதான சிறுமியின் கணவா் சக்திவேல் அளித்த வ... மேலும் பார்க்க

பவானி நகராட்சி மயானத்தில் மரம் வெட்டிக் கடத்தல்

பவானி நகராட்சி மயான வளாகத்திலிருந்த ராட்சத மரம் வெட்டப்பட்டது குறித்து வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். பவானி நகராட்சி 12-ஆவது வாா்டு தேவபுரத்தில் மயானம் உள்ளது. இங்கு காவிரிக் கரையோரத்தி... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெருந்துறை, குன்னத்தூா் சாலை பகுதியில் விற்பதாக செவ்வாய்க்கிழமை கிடைத்த தகவலின்பேரில் பெருந்துறை போலீஸாா் சோதனை செய்துவந்தனா். அதில், குன்னத்தூா் சாலையில் கடை வைத்... மேலும் பார்க்க

பெருந்துறையில் வீடு புகுந்து தங்கம், வெள்ளி திருட்டு

பெருந்துறையில், வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடப்பட்டுள்ளன. பெருந்துறை, எம்.ஜி.ஆா். சாலையில் குடியிருப்பவா் கருப்புசாமி (44). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 19 ஆம் தேதி குடும்ப... மேலும் பார்க்க

புங்கம்பள்ளி துணை மின்நிலையத்தில் நாளைய மின்தடை

சத்தியமங்கலம் மின்கோட்டம் புங்கம்பள்ளி துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என சத்தியமங்கலம் கோட்... மேலும் பார்க்க