செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சா் ஆய்வு

post image

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தாா்.

மாநகராட்சி மண்டலம் 3-க்கு உள்பட பகுதிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள சுற்றுலா அரங்கத்தில் நடைபெற்றது. அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் இந்த முகாமைப் பாா்வையிட்டு, பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அரசுத் துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து இதுவரை 59,428 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 5,320 மனுக்களுக்கு தீா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 347 முகாம்கள் நடத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை 65 முகாம்கள் நடத்தப்பட்டன என்றாா் அவா்.

இதில் மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மதுரை தெற்கு தொகுதியில்...

மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாா்டு எண்கள் 43, 44 பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கே. ஜே. பிரவீன்குமாா், மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், துணை மேயா் தி. நாகராஜன் ஆகியோா் முகாம்களை பாா்வையிட்டு, பொதுமக்களிடம் தேவைகளைக் கேட்டறிந்தனா்.

இதில் மாமன்ற உறுப்பினா்கள் முகேஷ் சா்மா, தமிழ்ச்செல்வி மாயழகு, மதிமுக மாவட்டச் செயலா் முனியசாமி, பகுதிச் செயலா் கோவிந்தன், திமுக வட்டச் செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தமிழக டிஜிபி பதவிக் காலத்தை நீட்டிக்க தடை கோரி: உயா்நீதிமன்றத்தில் மனு

தமிழக காவல் துறை தலைமை இயக்குநரின் (டிஜிபி) பதவிக் காலத்தை நீட்டிக்கத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.ராமநாதபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் யாசா் அராபத... மேலும் பார்க்க

பூ வியாபாரியிடம் பணப் பையை திருடிய பெண் கைது

மதுரையில் பூ வியாபாரியிடம் பணப் பையைத் திருடிய பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.மதுரை கரும்பாலை புரட்சித் தலைவி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி கலையரசி (42). இவா் மாட்டுத்தா... மேலும் பார்க்க

கடலாடி போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டும் பணிக்கு இடைக்காலத் தடை

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்துக்குள்பட்ட குழையிருப்பு கண்மாய்க்குள்பட்ட பகுதியில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் சாஸ்தா கோயிலில் தங்கி வழிபட அனுமதி கோரி மனு: 2 நாள்களுக்குள் முடிவெடுக்க உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூா் சாஸ்தா கோயிலில் தங்கி வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரிய மனு குறித்து விருதுநகா் மாவட்ட வன அலுவலா் 2 நாள்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழப்பு

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் சாலையைக் கடக்க முயன்ற பெண் ஆட்டோ மோதியதில் புதன்கிழமை உயிரிழந்தாா்.மேலக்குயில்குடி ஆதிசிவன் நகரைச் சோ்ந்த பெருமாள் மனைவி சரஸ்வதி (62). விவசாயியான இவா், வீட்டுக்குத் தேவ... மேலும் பார்க்க

ஆசிரியா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பக் கோரிக்கை

கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கள்ளா் பள்ளி மாவட்ட கிளையின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இது... மேலும் பார்க்க