செய்திகள் :

"உதயநிதிக்கு ED என்றால் 2011 சட்டமன்றத் தேர்தலிலிருந்தே பயம்" - நயினார் நாகேந்திரன் தாக்கு

post image

பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ”டாஸ்மாக் ஊழல் குறித்து தொடர்ந்து பேசிகிறோம். அதில் அமலாக்கத்துறை தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வழங்கியுள்ளது.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

துணை முதல்வரின் நண்பர்கள் ரித்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என அமலாக்கத் துறை கூறியது.

அவர்கள் லண்டன் சென்று விட்டனர். சிலர் அவர்கள் இங்குத்தான் தலைமறைவாக உள்ளதாகக் கூறுகின்றனர்.

உதயநிதி நாங்கள் இடி(ED)-க்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று கூறுகிறார். 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எப்படிக் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது மாடியில் அமலாக்கத்துறை ரெய்டு நடைபெற்று கொண்டிருக்கும்போதுதான், கீழே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

உதயநிதி
உதயநிதி

அன்றைக்கும் அமலாக்கத்துறைக்குப் பயந்து தான் பேச்சுவார்த்தை முடித்தார்களா எனத் தெரியவில்லை. அதனால் உதயநிதி ஸ்டாலினுக்கு அப்போதிருந்து அமலாக்கத்துறை மீது பயம் உள்ளது.

பயம் இல்லை என்றால் ரித்திஷ், ஆகாஷ் எதற்காக தலைமறைவாக வேண்டும். ராஜ்யசபா தேர்தல் கூட்டணி குறித்து எங்களின் தலைமைதான் முடிவு செய்யும்.

தி.மு.க ஆட்சியில் மக்கள் சிரமப்படுகிறார்கள். சொத்துவரி உயர்வு, ஆண்டுக்கு ஒரு முறை 6 சதவிகிதம் மின்கட்டண உயர்வு ஆகியவற்றால் தொழிற்சாலைகள் நடத்த முடியாத நிலை உள்ளது.

அரிவாள் ராஜ்ஜியம்... சந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு!

கட்டப் பஞ்சாயத்து, கஞ்சா கடத்தல் ஆகியவற்றால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தி.மு.க மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. இதற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Anakaputhur : 'எங்க சாபம் உங்களை சும்மா விடாது' - கண்ணீரில் அனகாபுத்தூர் மக்கள்! | Spot Report

"நீதிமன்ற தீர்ப்பின்படி அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம்" என்று சென்னை அனகாபுத்தூர் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு... மேலும் பார்க்க

Vijay -க்கு ஆதரவாக வந்த Seeman | டெல்லியில் Kamal - சோகத்தில் வைகோ? | DMK| Imperfect Show 28.5.2025

* ஞானசேகரன் குற்றவாளி எனச் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு!* திமுக அரசைக் கேள்வியெழுப்பும் எடப்பாடி பழனிசாமி!* மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு* மாந... மேலும் பார்க்க

TVK : 'உதயநிதி ஒரு சோட்டா பச்சா; திமுக ஒரு ஸ்டிக்கர் அரசு' - தவெக கொ.ப.செ ராஜ் மோகன்

'தவெக பத்திரிகையாளர் சந்திப்பு!'அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் சென்னை மகளிர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தவெக சார்பில் அக்கட்... மேலும் பார்க்க

’இது திமுக தலைமையின் தனி கணக்கு’ - மாநிலங்களவை வேட்பாளர் தேர்வும் பின்னணியும்!

தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை எம்.பி பதவிக்கு வரும் ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே திமுக தரப்பில் உள்ள ந... மேலும் பார்க்க

ED பயம் இல்லையென்றால் ஏன் ஓடி ஒழிய வேண்டும்? - நயினார் நாகேந்திரன்

வருகின்ற ஜூன் 26 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்க உள்ளது. மதுரை பாண்டி கோயில் அருகே நடைபெறும் இம்மாநாட்டுக்கான பூமி பூஜையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பொன் ர... மேலும் பார்க்க

மொழி விவகாரம்: "தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது; மொழியில் சர்ச்சைகள் வேண்டாம்" - அன்புமணி

கன்னட மொழி தமிழிலிருந்து தோன்றியது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியிருப்பது தற்போது அரசியல் பேசுபொருளாக மாறியிருக்கிறது.இந்த விஷயத்தில், கர்நாடக முதல்வர் சித்தராம... மேலும் பார்க்க