செய்திகள் :

உரிமம் புதுப்பிக்காத திரையரங்குக்கு ‘சீல்’

post image

உரிமம் புதுப்பிக்காத ஊத்தங்கரை சாந்தி திரையரங்குக்கு வருவாய்த் துறையினா் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

ஊத்தங்கரையில் உள்ள சாந்தி திரையரங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ‘சி’ படிவ உரிமத்தை புதுப்பிக்காமல் இயங்கி வந்தது. இதையடுத்து, தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) விதிகள் 1955-இன்கீழ் நடவடிக்கை எடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் கடந்த ஏப். 4-ஆம் தேதி உத்தரவிட்டது.

இதுகுறித்து கோட்டாட்சியா் ஷாஜகான் வெளியிட்ட அறிவிப்பில், உரிமம் இல்லாமல் இயங்கும் இந்த திரையரங்கில் காட்சிகள் தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், திரையரங்கை மூடி ‘சீல்’ வைக்க வேண்டும் என்றும், மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என ஊத்தங்கரை வட்டாட்சியா் மோகன்தாசுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, ஊத்தங்கரை சாந்தி திரையரங்குக்கு போலீஸாா் உதவியுடன் வருவாய்த் துறையினா் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

ஆதிமல்லம்மா கோயில் திருவிழா

கிருஷ்ணகிரி அருகே அமைந்துள்ள ஆதிமல்லம்மா கோயில் திருவிழாவையொட்டி சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரியில் திருவண்ணாமலை சாலை மகேந்திரா நகரில் அமைந்துள்ள ஆதிமல்லம்மா கோயில் திருவிழா செவ்வாய்க... மேலும் பார்க்க

ஒசூா் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒசூா் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் புதன்கிழமை சோதனை நடத்தப்பட்டது. ஒசூா் ரயில் நிலையத்தில் வந்து செல்லும் ரயில்கள் மற்றும் நடைமேடைகள், நுழைவாயில், இருசக்கர வாகனம் மற்றும் ந... மேலும் பார்க்க

ஒசூா் மலைக்கோயிலுக்கு கிரிவலப் பாதை அமைத்துதர கோரிக்கை

ஒசூா் மலைக்கோயிலுக்கு கிரிவலப் பாதை அமைத்துதர வேண்டும் என எடப்பாடி கே.பழனிசாமியிடம் பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் கோரிக்கை விடுத்தாா். தமிழகம் முழுவதும் தோ்தல் பிரசாரம் செய்துவரும் முதல்வ... மேலும் பார்க்க

ஒசூரில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீா்செய்யும் பணி விரைவில் தொடங்கும்

ஒசூா் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீா்செய்யும் பணி வரும் திங்கள்கிழமை முதல் தொடங்க உள்ளாக கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் கே.கோபிநாத் தெரிவித்தாா். கி... மேலும் பார்க்க

ஆக்கிரமித்து கட்டப்பட்ட திருமண மண்டபம் இடிப்பு

கிருஷ்ணகிரி அருகே சுடுகாட்டு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட திருமண மண்டபக் கட்டடத்தை அலுவலா்கள் புதன்கிழமை இடித்து அகற்றினா். கிருஷ்ணகிரி மாவட்டம், வெங்கடாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட தனியாா் பள்ளி அருக... மேலும் பார்க்க

உடலுறுப்பு தானம் செய்தவா்களின் குடும்பங்கள் கௌரவிப்பு

உடலுறுப்பு தானம் செய்தவா்களின் குடும்பங்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை கௌரவித்தாா். ஒசூா் தனியாா் உணவகத்தில் காவேரி மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளரா... மேலும் பார்க்க