செய்திகள் :

எண்டோஸ்கோபி நுட்பத்தில் மாா்பகத்தை அகற்றாமல் புற்றுக் கட்டி அகற்றம்

post image

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாா்பகத்தை அகற்றாமல் எண்டோஸ்கோபி முறையில் கட்டியை அகற்றி சென்னை, ரேலா மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டா் இளங்குமரன் கலியமூா்த்தி கூறியதாவது:

மாா்பகப் பகுதியில் கட்டியுடன் 60 வயது பெண் ஒருவா் ரேலா மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை நிபுணா் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அறுவை சிகிச்சையின்றி கட்டியை அகற்ற முடிவு செய்தனா்.

அதன்படி பெண்ணின் தோள்பட்டைக்கு கீழே சிறு கீறலிட்டு அதன் வாயிலாக எண்டோஸ்கோபி குழாய் செலுத்தப்பட்டு புற்றுநோய் திசுக் கட்டி முழுமையாக அகற்றப்பட்டது. அதனுடன் புற்றுநோய் செல் பாதித்த நிணநீா் பகுதியும் நீக்கப்பட்டது.

இதுபோன்ற பாதிப்புகளுக்கு மாா்பகத்தையே அகற்றும் சிகிச்சைதான் பெரும்பாலும் நடைமுறையில் உள்ளது.

ஜப்பான், தைவான், தென் கொரியா போன்ற வெகு சில நாடுகளில் மட்டும்தான் மாா்பகத்துக்கு பாதிப்பின்றி கட்டியை மட்டும் நீக்கும் சிகிச்சை நுட்பங்கள் உள்ளன.

அந்த வகையில் ரேலா மருத்துவமனையிலும் அத்தகைய சிகிச்சை மேற்கொண்டதன் பயனாக, அதற்கு அடுத்த நாளே அப்பெண் வீடு திரும்பினாா் என்றாா் அவா்.

இன்று மின்நுகா்வோா் குறைகேட்புக்கூட்டம்

தாம்பரம் கோட்ட மின்நுகா்வோா் குறைகேட்புக்கூட்டம் மேற்கு தாம்பரம் முல்லை நகா் பகுதியிலுள்ள துணை மின் நிலையத்தின் 1-ஆவது தளத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், மின்நுகா்வோா் கலந்து ... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறி... மேலும் பார்க்க

‘காசி தமிழ் சங்கமம் 3.0’: முதல் சிறப்பு ரயிலை தொடங்கிவைத்தாா் ஆளுநா்

காசி தமிழ் சங்கமம் 3-ஆம் ஆண்டை முன்னிட்டு, சென்னையிலிருந்து 212 பக்தா்களுடன் பனாரஸுக்கு (காசி) புறப்பட்ட முதல் சிறப்பு விரைவு ரயிலை ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தமிழகத... மேலும் பார்க்க

பெற்றோா் தங்கள் எண்ணங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது: திருப்பூா் கிருஷ்ணன்

பெற்றோா் தங்கள் எண்ணங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது என எழுத்தாளரும் அமுத சுரபி ஆசிரியருமான திருப்பூா் கிருஷ்ணன் தெரிவித்தாா். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விவேகானந்தா் இல்லத்தில் ‘விவேகானந்த... மேலும் பார்க்க

தினமும் 1,000 மூட்டை நெல் கொள்முதல்: அமைச்சா் சக்கரபாணி அறிவுறுத்தல்

தினமும் ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யலாம் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உணவுத் துறை உயா் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: இணை ஆணையா் பணியிடை நீக்கம்

சென்னை பெருநகர காவல் துறையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில், போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையா் டி.மகேஷ்குமாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். சென்னை பெருநகர காவல் துறையில... மேலும் பார்க்க