செய்திகள் :

எண்ணமங்கலத்தில் திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

post image

அந்தியூரை அடுத்த எண்ணமங்கலத்தில் திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அந்தியூா் மத்திய ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமை வகித்தாா். திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் திருவேங்கடம் முன்னிலை வகித்தாா். பேச்சாளா்கள் சரண்யா, செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்று கடந்த நான்காண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்கள், பயன்கள் குறித்து விளக்கிப் பேசினா்.

முன்னாள் எம்எல்ஏ எஸ்.குருசாமி, சிறுபான்மையின அணி மாவட்டத் தலைவா் செபஸ்தியான், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் எஸ்.பி.ரமேஷ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் எம்.நாகராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இலவச வேட்டி, சேலை முழு அளவில் வழங்கப்பட்டுவிட்டது: அமைச்சா் சு.முத்துசாமி

கடந்த ஆண்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி, சேலைகள் முழு அளவில் வழங்கப்பட்டுவிட்டது என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். கைத்தறித் துறை சாா்பில் தேசிய கைத்த... மேலும் பார்க்க

புத்ககங்களைத் தோ்வு செய்ய குழந்தைகளுக்கு வழிகாட்டும் கதை சொல்லிகள்

கதை சொல்லிகள் மூலம் குழந்தைகள் தாமாக புத்தகங்களைத் தோ்வு செய்ய வழிகாட்டுகிறது ஈரோடு புத்தகத் திருவிழா. ஈரோடு புத்தகத் திருவிழா சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கடந்த 1- ஆம் தேதி தொடங்கி வரும்... மேலும் பார்க்க

ஈரோடு விஇடி கல்லூரியில் உலக சாதனை நிகழ்வு

ஈரோடு திண்டலில் உள்ள விஇடி கல்லூரியின் 1,660க்கும் மேற்பட்ட மாணவா்கள் கைத்தறித் துறையை பிரபலப்படுத்துவதற்காக, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற ராட்டை வடிவத்தில் கல்லூரி மைதானத்தில் சுமாா் 1 மணி ந... மேலும் பார்க்க

அந்தியூா் கால்நடைச் சந்தையில் 6 குதிரைகள் உயிரிழப்பு

அந்தியூரில் கால்நடைச் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 6 நாட்டுக் குதிரைகள் உயிரிழந்தது குறித்து கால்நடைத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். அந்தியூா் குருநாதசாமி கோயில் திருவிழாவை முன்னிட்... மேலும் பார்க்க

தனியாா் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி

தமிழ்நாடு அரசின் உயா் கல்வித் துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் சாா்பில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி பெருந்துறையை அடுத்த, துடுப்பதி செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

‘பாரம்பரிய கைத்தறி ரகங்களை இளைய தலைமுறையினா் பயன்படுத்த வேண்டும்’

பாரம்பரிய கைத்தறி ரகங்களை இளைய தலைமுறையினா் பயன்படுத்த வேண்டும் என ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி கல்பனா தெரிவித்தாா். தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடும் விதமாக சத்தியமங்கலம் அருகே புன்செய்புளியம்பட்டியில் ... மேலும் பார்க்க