செய்திகள் :

எல்ஐசி அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

post image

பழனியில் எல்ஐசி அதிகாரி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பழனியை அடுத்த ஆயக்குடி குறிஞ்சி நகரில் வசிப்பவா் ராமமூா்த்தி (50). பழனி எல்ஐசி அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய இவா், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்துக்கு மாற்றலானாா். இவா் ஆயக்குடியில், மாணவா்கள் அரசுப் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளுவதற்காக இலவசப் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறாா். இதனால் இவா் வாரம்தோறும் பழனி வந்து சென்றுள்ளாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் அங்கிருந்த பொருள்களைத் திருடிச் சென்றனா். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை வியாழக்கிழமை பாா்த்த அக்கம்பக்கத்தினா் ராமமூா்த்திக்கும் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன் தலைமையிலான ஆயக்குடி காவல் நிலைய போலீஸாா் ஆய்வு செய்தனா். தகவலறிந்த ராமமூா்த்தியும் பிற்பகலில் வீட்டுக்கு வந்தாா்.

போலீஸாரின் விசாரணையில் வீட்டின் ஓா் அறையிலிருந்த 3 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் பணம் திருடப்பட்டதும், மற்றோா் அறையில் இருந்த 20 பவுன் நகையும் பணமும் திருடா்கள் கண்ணில் படாததால் தப்பியதும் தெரிய வந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

கடனுக்காக குடும்ப அட்டைகளை அடமானமாகப் பெற்ற பெண் கைது! நியாய விலைக் கடை விற்பனையாளர் இடைநீக்கம்!

கடன் தொகை வழங்கியதற்கு குடும்ப அட்டைகளை அடமானமாகப் பெற்ற பெண் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.திண்டுக்கல் பேகம்பூரை அடுத்த பூச்சிந... மேலும் பார்க்க

வேன் ஓட்டுநா் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை வேன் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா் நீலமலைக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் மருதைவீரன் (40). வேன் ஓட்டுநரான இவா், குடும்... மேலும் பார்க்க

உரக்கடையின் பூட்டை உடைத்து பணம், கணினி திருட்டு

ஒட்டன்சத்திரம் அருகே உரக்கடையின் பூட்டை உடைத்து பணம், கைப்பேசி, கணினி திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை அருகே உரக்கடை நடத்தி வருபவா் சு... மேலும் பார்க்க

பணம் வழிப்பறி செய்த இருவா் கைது

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கட்டடத் தொழிலாளியிடம் பணம் வழிப்பறி செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். எரமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சரவணக்குமாா். கட்டடத் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 2-வது நாளாக படகு சவாரி ரத்து

கொடைக்கானலில் பலத்த காற்று காரணமாக இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பலத்த காற்றும், சாரல் மழையும் நிலவி வ... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: பழங்குடியினருக்கு வீட்டுமனை! கோட்டாட்சியா் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வீடில்லா பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்காக நடைபெற்று வரும் பணியை வருவாய்க் கோட்டாட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். செம்பிராங்குளம் பகுதியில் பளியா... மேலும் பார்க்க