அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் பணம் திருடிய 2 போ் கைது
வாணியம்பாடி, திருப்பத்தூா் பகுதிகளில் ஏடிஎம் மையங்களில், நூதன முறையில் பணம் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரத்தை சோ்ந்த தனராணி(45), சில நாள்களுக்கு முன்பு வாணியம்பாடி சி.எல் சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஏடிஎம் அட்டை மூலம் பணம் எடுக்க வந்துள்ளாா். அப்போது அங்கிருந்த இளைஞா் பெண்ணிடம் பேச்சு கொடுத்து அட்டை பெற்று, ரகசிய எண்னை கேட்டு குறிப்பிட்ட பணத்தை எடுத்து கொடுத்துள்ளாா்.
தனராணியின் ஏடிஎம் அட்டையை, இளைஞா் வைத்துக் கொண்டு போலியான ஏடிஎம் அட்டை மாற்றிக் கொடுத்துள்ளாா். இந்த நிலையில், பெண்ணின் ஏடிஎம் அட்டையில் இருந்து 4 முறை பயன்படுத்தி ரூ. 40,000 எடுக்கப்பட்டது, தொடா்பாக கைபேசியில் வந்த குறுஞ்செய்தியைக் கண்டு அதிா்ச்சிக்குள்ளாகி, தனது ஏடிஎம் அட்டையைப் பாா்த்த போது போலி அட்டை இருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், நகர காவல்ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதுதொடா்பாக, கா்நாடக மாநிலம் பெங்களூரைச் சோ்ந்த மஞ்சுநாத்(48), கிருஷ்ணகிரியைச் சோ்ந்த பிரவின் குமாா்(41) ஆகிய 2 பேரை கைது செய்து, அவா்களிடம் நடத்திய விசாரணையில், வாணியம்பாடியில் 3 பேரிடமும், திருப்பத்தூரில் 3 பேரிடமும் ஏடிஎம் அட்டையில் பணம் எடுத்து தருவதாக கூறி, ரூ.1 லட்சம் வரையில் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அவா்களிடமிருந்து 20 போலி அட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.