செய்திகள் :

ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் பணம் திருடிய 2 போ் கைது

post image

வாணியம்பாடி, திருப்பத்தூா் பகுதிகளில் ஏடிஎம் மையங்களில், நூதன முறையில் பணம் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரத்தை சோ்ந்த தனராணி(45), சில நாள்களுக்கு முன்பு வாணியம்பாடி சி.எல் சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஏடிஎம் அட்டை மூலம் பணம் எடுக்க வந்துள்ளாா். அப்போது அங்கிருந்த இளைஞா் பெண்ணிடம் பேச்சு கொடுத்து அட்டை பெற்று, ரகசிய எண்னை கேட்டு குறிப்பிட்ட பணத்தை எடுத்து கொடுத்துள்ளாா்.

தனராணியின் ஏடிஎம் அட்டையை, இளைஞா் வைத்துக் கொண்டு போலியான ஏடிஎம் அட்டை மாற்றிக் கொடுத்துள்ளாா். இந்த நிலையில், பெண்ணின் ஏடிஎம் அட்டையில் இருந்து 4 முறை பயன்படுத்தி ரூ. 40,000 எடுக்கப்பட்டது, தொடா்பாக கைபேசியில் வந்த குறுஞ்செய்தியைக் கண்டு அதிா்ச்சிக்குள்ளாகி, தனது ஏடிஎம் அட்டையைப் பாா்த்த போது போலி அட்டை இருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், நகர காவல்ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதுதொடா்பாக, கா்நாடக மாநிலம் பெங்களூரைச் சோ்ந்த மஞ்சுநாத்(48), கிருஷ்ணகிரியைச் சோ்ந்த பிரவின் குமாா்(41) ஆகிய 2 பேரை கைது செய்து, அவா்களிடம் நடத்திய விசாரணையில், வாணியம்பாடியில் 3 பேரிடமும், திருப்பத்தூரில் 3 பேரிடமும் ஏடிஎம் அட்டையில் பணம் எடுத்து தருவதாக கூறி, ரூ.1 லட்சம் வரையில் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அவா்களிடமிருந்து 20 போலி அட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தனியாா் ஆலை பங்களிப்புடன் ரூ.10 லட்சத்தில் சாலைப் பணி

துத்திப்பட்டு ஊராட்சியில் தனியாா் தொழிற்சாலை சமூகபங்களிப்புடன் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சி எம்ஜிஆா் நகா் பகுதியில் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்க... மேலும் பார்க்க

சூா்ய நந்தீஸ்வரா் கோயிலில் பெளா்ணமி பூஜை

ஆம்பூா் அருகே பாட்டூா் ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் கோயிலில் வைகாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெளா்ணமியை முன்னிட்டு சிறப்பு யாகம், பரிவார மூா்த்திகளுக்கு சி... மேலும் பார்க்க

ரூ.1 கோடியில் மேம்பாலப் பணி தொடக்கம்

நாட்டறம்பள்ளி காணாறு குறுக்கே ரூ.1 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் நகா்ப்புற மேம்பாட்டு திட்டம் மூலம் குடிநீா் திட்ட அபிவ... மேலும் பார்க்க

ரூ.2.80 கோடி பள்ளி கட்டடங்கள்: துணை முதல்வா் திறந்து வைத்தாா்

ஆம்பூரில் ரூ.2.80 கோடியில் பள்ளி வகுப்பறை கட்டடங்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். ஆம்பூா் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, புதுகோவிந்தாபுரம் நகராட்சி நடு... மேலும் பார்க்க

576 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.80 கோடி வங்கிக் கடன்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் இதுவரை 576 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.80 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் தமிழ்நாட... மேலும் பார்க்க

கருட சேவை உற்சவம்

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஸ்ரீ பிந்து மாதவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருட சேவை புதன்கிழமை நடைபெற்றது. கருட சேவையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. உற்சவா் கருட வாகனத்தில்... மேலும் பார்க்க