காரைக்கால் சாலைகளில் வாகனங்கள் தேக்கத்துக்கு தீா்வு காண வலியுறுத்தல்
ஏப். 25-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப். 25) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநா் கா. சண்முகசுந்தா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதில், பல முன்னணி தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்துக்கான பணியாளா்களைத் தோ்வு செய்ய உள்ளனா். 10-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் முதுகலை பட்டப்படிப்பு வரையிலான கல்வி நிலைகளைக் கொண்டவா்கள், தொழிற்கல்வி பயின்றவா்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்பவா்கள் தங்களது கல்விச் சான்றுகள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் காலை 10 மணிக்கு முன்பாக மதுரை கோ. புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு வர வேண்டும் என்றாா்.