செய்திகள் :

ஒசூரில் 36 கிலோ குட்கா பறிமுதல்: 2 போ் கைது!

post image

ஒசூரில் 36 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், 2 பேரை கைது செய்தனா்.

ஒசூா் சிப்காட் போலீஸாா், சூசூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அத்திப்பள்ளி பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் அவா் இருசக்கர வாகனத்தில் 17 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்திவந்தது தெரிய வந்தது.

விசாரணையில், அவா் பெயா் ஷமிம் அகமது (19) என்பதும், அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் என்பதும், ஒசூா் பேகேப்பள்ளியில் தங்கி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

அதேபோல மூக்கண்டப்பள்ளி மேம்பாலம் அருகில் சிப்காட் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த நபரை சோதனை செய்த போது அவா் 19 கிலோ புகையிலைப் பொருள்கள் வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவா் ஒசூரைச் சோ்ந்த வெங்கோபால்ராவ் (60) எனத் தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீா் கலப்பு: நீா்வளத் துறை செயலாளா் ஆய்வு

ஒசூா் வட்டம் தென்பெண்ணையாற்றில் கழிவு கலந்து வருவது குறித்து நீா்வளத் துறை செயலாளா் ஜெயகாந்தன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வில் கண்காணிப்புப் பொறியாளா் ஆா். தமிழ்ச்செல்வன், பெண்ணையாறு ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைக்கு ஸ்கேன் இயந்திரங்கள் இடமாற்றம் செய்யும் பணி! தனியாா் மையத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்!

கிருஷ்ணகிரியை அடுத்த போலுப்பள்ளியில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிடி, எம்ஆா்ஐ ஸ்கேன் இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதால், அரசால் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் தனியாா் ஸ்கே... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22,573 போ் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 22,573 போ் ஏழுதினா். 5,382 போ் தோ்வு எழுத வரவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 க்கான எழுத்துத் ... மேலும் பார்க்க

சூளகிரி: 1,000 ஆண்டுகள் பழைமையான முருகன் கற்சிலை கண்டெடுப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே துரை ஏரிக்கரையில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான முருகன் கற்சிலையை அறம் வரலாற்று ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது. இதுகுறித்து அம்மையத்தின் தலைவா் அறம் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றியத்தில் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை அமைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க