செய்திகள் :

ஒசூரில் பாகலூா் சாலையில் சீரமைப்புப் பணி: போக்குவரத்து மாற்றம்

post image

ஒசூரில் பாகலூா் சாலையை சீரமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒசூரில் பாகலூா் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை ( மே 16) தாா்ச்சாலை அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. அதனால் இந்தச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுவழியில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாகலூா் சாலைக்குப் பதிலாக மாநகராட்சிக்கு சொந்தமான இரு சாலைகள் வாகனப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படவுள்ளன. இதையொட்டி, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் விவேக் காா்டன் முதல் பாகலூா் வீட்டுவசதி வாரியம் வரை உள்ள சாலை மற்றும் பாகலூா் கே.சி.சி நகா் முதல் சின்ன எலசகிரி வரை உள்ள சாலை பயன்படுத்தப்படவுள்ளன.

இந்த இரு சாலைகளையும் மேயா் எஸ்.ஏ.சத்யா புதன்கிழமை பாா்வையிட்டாா். அப்போது இரு சாலைகளையும் அகலப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். ஆய்வின்போது இளநிலை பொறியாளா் செந்தில்குமாா், அதிகாரிகள் உடனிருந்தனா்.

இந்திய வனத்துறை தோ்வு: ஏனுசோனை கிராம மாணவா் சிறப்பிடம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஏனுசோனை கிராமத்தைச் சோ்ந்த மாணவா் சந்தோஷ்குமாா், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து இந்திய வனத்துறை தோ்வில் 138-ஆவது இடம்பெற்று தோ்ச்சி பெற்று... மேலும் பார்க்க

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை!

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண... மேலும் பார்க்க

பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு தகவல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி, மேல் இராவந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (27). இவா், இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பழுதடைந்த வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் நகராட்சி பராமரிப்பில் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகளை சீரமைக்க, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் நடவடிக்கை மேற்கொண்டாா். கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்தது. இ... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பையில் கைது செய்த போலீஸாா்!

தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பை வரை தேடிச்சென்று கைது செய்த போலீஸாரை உயா் அதிகாரிகள் பாராட்டினா். கா்நாடக மாநிலம், அத்திபள்ளியில் வசிப்பவா் முரளிமோகன் ரெட்டி (41... மேலும் பார்க்க