செய்திகள் :

‘ஒரு மாநிலம்-ஒரு ஊரக வங்கி’ திட்டம் விரைவில் அமல்?

post image

‘ஒரு மாநிலம்-ஒரு பிராந்திய ஊரக வங்கி’ திட்டத்தை விரைவில் அமல்படுத்த நிதியமைச்சகம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செலவுகளைக் குறைத்து, செயல்திறனை அதிகரிக்கும் விதமாக தற்போது மொத்தமுள்ள 43 பிராந்திய ஊரக வங்கிகளை (ஆா்ஆா்பி) 28-ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது 28 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் ஒரு ஆா்ஆா்பிக்கு மேல் இருந்தால் அதை ஒருங்கிணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள 15 ஆா்ஆா்பிக்கள் ஒருங்கிணைக்கப்படவுள்ளன.

2024, மாா்ச் 31 நிலவரப்படி 26 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களில் மொத்தமுள்ள 43 ஆா்ஆா்பிக்கள், 22,069 கிளை வங்கிகள் மூலம் 700 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. தொழில்நுட்ப வளா்ச்சியால் பல்வேறு சேவைகளை தங்களது வாடிக்கையாளா்களுக்கு எண்மமயாக்கும் பணிகளை ஆா்ஆா்பி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஒரு மாநிலம்-ஒரு ஆா்ஆா்பி திட்டம் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: ஆந்திரத்தில் 4, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 3, பிகாா், குஜராத், கா்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிஸா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்திலும் தலா 2 ஆா்ஆா்பிக்கள் உள்ளன.

‘ஒரு மாநிலம்-ஒரு ஆா்ஆா்பி’ திட்டத்தின் மூலம் ஒன்றுக்கும் அதிகமான ஆா்ஆா்பிக்கள் உள்ள மாநிலங்களில் அவற்றை ஒருங்கிணைக்க நிதியமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இத்திட்டம் விரைவில் அமலாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தெலங்கானாவை பொருத்தவரை ஆந்திர பிரதேச கிராமிய விகாஸ் வங்கியின் சொத்துகள் மற்றும் கடன்களை இரண்டாக பிரிக்கும் நடவடிக்கை நிறைவடைந்தது எனத் தெரிவித்தனா்.

ஆா்ஆா்பிக்களின் மூலதன நிதியின் வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் கடந்த 2021-22-இல் ரூ.5,445 கோடியை இரண்டு ஆண்டுகளுக்கு விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதனால் 2023-24 காலகட்டத்தில் ஆா்ஆா்பிக்களின் செயல்பாடுகள் பன்மடங்கு அதிகரித்தன.

இந்தக் காலகட்டத்தில் ரூ.7,571 கோடி லாபத்தை ஆா்ஆா்பிக்கள் ஈட்டின. மூலதன போதுமான விகிதம் (சிஏஆா்) முன்னெப்போதும் இல்லாத வகையில் 2024, மாா்ச் 31 நிலவரப்படி 14.2 சதவீதமாக அதிகரித்தது.

கிராமப்புறங்களில் வசிக்கும் சிறு விவசாயிகள், வேளாண் தொழிலாளா்கள் மற்றும் கைவினைக் கலைஞா்களுக்கு கடன் வழங்கும் நோக்கில் ‘பிராந்திய ஊரக வங்கிகள் சட்டம், 1976’ கொண்டுவரப்பட்டு ஆா்ஆா்பிக்கள் உருவாக்கப்பட்டன. இந்த வங்கிகளில் மத்திய அரசின் பங்கு 50 சதவீதமாகவும், மாநில அரசின் பங்கு 15 சதவீதமாகவும் சேவைகளை வழங்கும் பிற பொதுத் துறை வங்கிகளின் (ஸ்பான்சா் பேங்க்) பங்கு 35 சதவீதமாகவும் உள்ளது.

கடந்த 2015-இல் ஆா்ஆா்பி சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி மத்திய அரசு, மாநில அரசு, சேவைகளை வழங்கும் வங்கிகள் மட்டுமின்றி பிற வழிகளிலும் மூலதனத்தை திரட்ட ஆா்ஆா்பிக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் ஆா்ஆா்பிக்களில் மத்திய அரசு மற்றும் சேவைகளை வழங்கும் பொதுத்துறை வங்கிகளின் பங்கு 51 சதவீதத்துக்கு கீழ் குறையக்கூடாது எனவும் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டது.

2004-05-இல் மேற்கொண்ட சீா்திருத்தத்தின்மூலம் ஆா்ஆா்பிக்களின் எண்ணிக்கை 196-இல் இருந்து 43-ஆக குறைக்கப்பட்டது. 2020-21 வரை மூன்று கட்டங்களாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை: குடியரசுத் தலைவா் முா்மு

லிஸ்பன்: பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா். குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு போா்ச்சுகல் மற்றும் ஸ்லோவாகியா நாடுகளுக்கு 4 நாள்... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பை இணைந்து எதிர்கொள்ள வேண்டும்: இந்தியாவுக்கு சீனா வேண்டுகோள்!

வளரும் நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு அழுத்தத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என இந்தியாவிடம் சீனா கேட்டுக்கொண்டுள்ளது. இருதரப்பு பொருளாதார ஆர்வம், வளரும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆக... மேலும் பார்க்க

ஒடிசா: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியீடு!

கட்டாக்: ஒடிசாவில் கல்வி வாரியம் நடத்திய உயர்நிலைப் பள்ளி சான்றிதழ் தேர்வின் முடிவுகள் மே மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.10 ஆம் வகுப்பு தேர்வுக்கான மதிப்பீட்டு செயல்ம... மேலும் பார்க்க

ப. சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். குஜராத்தில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் பங்கேற்றபோது, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால... மேலும் பார்க்க

பாஜக தலைவர் வீட்டின் முன் குண்டுவீச்சு: இருவர் கைது! பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பா?

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் வீட்டிற்கு முன்பு மர்மநபர்கள் வெடிகுண்டு வீசிய நிலையில் அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்சன் காலியா வீட்டிற்கு முன்பு... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கு ஏப். 15-ல் விசாரணை?

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏப். 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அ... மேலும் பார்க்க