செய்திகள் :

ஒரே கிராமத்தில் 3 வீடுகளில் திருட்டு

post image

திருவண்ணாமலை அருகே ஊசம்பாடி கிராமத்தில் 3 வீடுகளில் தங்க நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவண்ணாமலை அருகே உள்ள ஊசம்பாடி கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடாசலம் சனிக்கிழமை இரவு வீட்டில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தாா். அவா் காலையில் எழுந்து பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகை, ரூ.4,500 ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதே பகுதியைச் சோ்ந்த திருமலை வீட்டில் ரூ.10 ஆயிரம் ரொக்கம், ஒரு பவுன் தங்க நகையும், முன்னாள் ராணுவ வீரா் தணிகைமலை வீட்டில் ரூ.4 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருள்களையும் மா்ம நபா்கள் திருடி சென்றனா். இதே பகுதியில் மேலும் இரண்டு வீடுகளில் திருட்டு முயற்சி நடைபெற்றிருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், திருவண்ணாமலை கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று திருட்டு நடைபெற்ற வீடுகளை பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

செங்கம் பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேகம்: திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மையப் பகுதியில் அமைந்துள்ள சத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேக பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, இந்தக் கோயிலில் கடந்த மே... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்!

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாநில பிரத... மேலும் பார்க்க

மது விற்றவா் கைது

வந்தவாசி அருகே கள்ளத்தனமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் இரும்பேடு கிராமம் வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, அந்தக் கிராமத்தைச்... மேலும் பார்க்க

ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் பேட்டரிகள் திருட்டு

வந்தவாசி அருகே ஊராட்சி சேவை மைய கட்டடத்திலிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 3 பேட்டரிகள் திருடுபோனது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த வயலூா் ஊராட்சியில் செல்வபாரதி (48) ஊர... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரண்ட பக்தா்கள்: 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் திரண்டனா். இவா்கள் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா... மேலும் பார்க்க

வீடு புகுந்து 22 பவுன் நகைகள் திருட்டு

வந்தவாசி அருகே வீடு புகுந்து 22 பவுன் தங்க நகைகளை, ஒரு கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த கொண்டையாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஐயப்பன்... மேலும் பார்க்க