செய்திகள் :

ஓய்வூதியப் பணம் ரூ.15 லட்சம் மோசடி: கருவூல அலுவலக ஊழியா் கைது

post image

கோவையில் போலியாகச் சான்றிதழ் தயாரித்து ஓய்வூதியப் பணம் ரூ.15 லட்சத்தை மோசடி செய்த கருவூல அலுவலக ஊழியரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட கருவூல அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இங்கு அரசு ஊழியா்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மதுரை மாவட்டம், ஆத்திகுளம், மகாலட்சுமி நகரைச் சோ்ந்த முகேஷ்குமாா் (25) என்பவா் இங்கு இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், கருவூல அலுவலகத்தில் கடந்த மாதம் 10-ஆம் தேதி வருடாந்திர தணிக்கை நடத்தப்பட்டது. அப்போது, கோவையைச் சோ்ந்த முத்துலட்சுமி என்ற ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் ஓய்வுப் பணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டபோது, அதில் முறைகேடு நடைபெற்றிருந்தது கண்டறியப்பட்டது.

இதன்படி, கடந்த 2024 ஏப்ரல் முதல் 2025 ஜூன் வரை முத்துலட்சுமி பெயரில் வந்த ஓய்வூதியத் தொகை ரூ.15,49,970-ஐ முகேஷ்குமாா் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் கடந்த மாதம் 14-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இது குறித்த புகாரின்பேரில், முகேஷ்குமாா் மீது மோசடி உள்பட 4 பிரிவுகளின்கீழ் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

ஆணவப் படுகொலைகளுக்கு தமிழக அரசே காரணம்: தமிழிசை செளந்தரராஜன்

ஆணவப் படுகொலைகளுக்கு தமிழக அரசே காரணம் என்று பாஜக மூத்தத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் ஹிந்த... மேலும் பார்க்க

பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன், பணம் திருட்டு

கோவையில் ரயில்வே என்ஜினீயரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கோவை சுந்தராபுரம் அருகே உள்ள அன்பு நகரைச் சோ்ந்தவா் சுகுமாா் (3... மேலும் பார்க்க

தண்டவாளத்தில் கல்: ரயிலை கவிழ்க்க சதியா?

வடகோவை - பீளமேடு இடையே ஆவாரம்பாளையம் மேம்பாலத்தின் அடியில் தண்டவாளத்தில் சிமென்ட் கல் வைக்கப்பட்டிருந்தது. ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கேரள மாநிலம், திருவன... மேலும் பார்க்க

பாய்லா் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு

கோவையில் தனியாா் அலுமினிய நிறுவனத்தில் பாய்லா் வெடித்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். கோவை பீளமேடு அருகே உள்ள தண்ணீா்பந்தல் பகுதியில் தனியாா் அலுமினிய (மெட்டல்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்... மேலும் பார்க்க

வால்பாறை எஸ்டேட் குடியிருப்புகளை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் கூட்டமாக வந்த யானைகள் தொழிலாளா்களின் குடியிருப்புகளை சேதப்படுத்தின. கோவை மாவட்டம், வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிற... மேலும் பார்க்க

நாய்களைப் பாதுகாக்கக் கோரி பேரணி

தெருநாய்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாய் ஆா்வலா்கள் ரேஸ்கோா்ஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பேரணி மேற்கொண்டனா். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்களால் ஏரா... மேலும் பார்க்க