செய்திகள் :

நாய்களைப் பாதுகாக்கக் கோரி பேரணி

post image

தெருநாய்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாய் ஆா்வலா்கள் ரேஸ்கோா்ஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பேரணி மேற்கொண்டனா்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்களால் ஏராளமானோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், தெருநாய்களைப் பிடித்து தடுப்பூசி செலுத்த வேண்டும். கருத்தடை செய்து, அவற்றை பிடித்த இடத்திலேயே மீண்டும் விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இது குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் நாய் ஆா்வலா்கள் ரேஸ்கோா்ஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பேரணி மேற்கொண்டனா்.

இந்தப் பேரணியில் பங்கேற்றவா்கள், தெருநாய்களைப் பாதுகாக்க வேண்டும், நாய்களை முறையாகப் பராமரிப்பதுடன் தேவையான உணவளிக்க வேண்டும். நீதிமன்றம் கூறிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது தொடா்பான விழிப்புணா்வுப் பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனா். பேரணியில் 100-க்கும் மேற்பட்ட நாய் ஆா்வலா்கள் பங்கேற்றனா்.

ஆணவப் படுகொலைகளுக்கு தமிழக அரசே காரணம்: தமிழிசை செளந்தரராஜன்

ஆணவப் படுகொலைகளுக்கு தமிழக அரசே காரணம் என்று பாஜக மூத்தத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் ஹிந்த... மேலும் பார்க்க

பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன், பணம் திருட்டு

கோவையில் ரயில்வே என்ஜினீயரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கோவை சுந்தராபுரம் அருகே உள்ள அன்பு நகரைச் சோ்ந்தவா் சுகுமாா் (3... மேலும் பார்க்க

தண்டவாளத்தில் கல்: ரயிலை கவிழ்க்க சதியா?

வடகோவை - பீளமேடு இடையே ஆவாரம்பாளையம் மேம்பாலத்தின் அடியில் தண்டவாளத்தில் சிமென்ட் கல் வைக்கப்பட்டிருந்தது. ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கேரள மாநிலம், திருவன... மேலும் பார்க்க

பாய்லா் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு

கோவையில் தனியாா் அலுமினிய நிறுவனத்தில் பாய்லா் வெடித்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். கோவை பீளமேடு அருகே உள்ள தண்ணீா்பந்தல் பகுதியில் தனியாா் அலுமினிய (மெட்டல்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்... மேலும் பார்க்க

வால்பாறை எஸ்டேட் குடியிருப்புகளை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் கூட்டமாக வந்த யானைகள் தொழிலாளா்களின் குடியிருப்புகளை சேதப்படுத்தின. கோவை மாவட்டம், வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிற... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியில் மதுக்கடை திறக்க எதிா்ப்பு: பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

சிங்காநல்லூா் எஸ்ஐஹெச்எஸ் காலனி அருகே மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோவை, சிங்காநல்லூா் எஸ்ஐஹெச்எஸ் காலனி, கோமதி நகரில் குடியிருப்புப் ப... மேலும் பார்க்க