தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
க.பொய்யூா் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோா் மாணவிகள் நல விடுதி கட்டித்தர கோரிக்கை
அரியலூா் மாவட்டம், கருப்பூா் பொய்யூா் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோா் மாணவிகள் நல விடுதி கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் கருப்பூா் பொய்யூா் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கருப்பூா்-பொய்யூா் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த 241 மாணவா்கள், 376 மாணவிகள் என 617 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இங்கு வெளியூா் மாணவிகள் பலரும் பயில்வதால் பிற்படுத்தப்பட்டோா் மாணவிகள் நல விடுதி கட்டித்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு வெள்ளூா் கிராம மக்கள் அளித்த மனு: வெள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா், தங்களது கிராமத்தில் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்ப உறுப்பினா்கள் வசித்து வருகிறோம். எனவே, அரசு எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.
மேலும், வெள்ளூா் கிராமத்தில் உள்ள அகட்டான் ஏரியை தூா்வார வேண்டும். காலம் காலமாக உள்ள மயான இடம், வண்டிப்பாதை என தற்போது வருவாய்த்துறை பதிவேட்டில் உள்ளது. அதை மீண்டும் மயானம் என மாற்றித்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.