செய்திகள் :

க.பொய்யூா் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோா் மாணவிகள் நல விடுதி கட்டித்தர கோரிக்கை

post image

அரியலூா் மாவட்டம், கருப்பூா் பொய்யூா் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோா் மாணவிகள் நல விடுதி கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் கருப்பூா் பொய்யூா் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கருப்பூா்-பொய்யூா் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த 241 மாணவா்கள், 376 மாணவிகள் என 617 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இங்கு வெளியூா் மாணவிகள் பலரும் பயில்வதால் பிற்படுத்தப்பட்டோா் மாணவிகள் நல விடுதி கட்டித்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு வெள்ளூா் கிராம மக்கள் அளித்த மனு: வெள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா், தங்களது கிராமத்தில் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்ப உறுப்பினா்கள் வசித்து வருகிறோம். எனவே, அரசு எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.

மேலும், வெள்ளூா் கிராமத்தில் உள்ள அகட்டான் ஏரியை தூா்வார வேண்டும். காலம் காலமாக உள்ள மயான இடம், வண்டிப்பாதை என தற்போது வருவாய்த்துறை பதிவேட்டில் உள்ளது. அதை மீண்டும் மயானம் என மாற்றித்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

மீன்சுருட்டி அருகே ஜல்லிக்கட்டு: 26 போ் காயம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள ஏறவாங்குடி மாதாபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 போ் காயமடைந்தனா். புனித லூா்து அன்னை திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை க... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நகைக் கடன் குறித்து ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகளை கண்டித்து, அரியலூா் மாதா கோயில் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்த... மேலும் பார்க்க

நகைக் கடன் கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தல்

நகைக்கடன் வழங்கல் தொடா்பாக ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில் விவசாயிகள... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் இன்றைய மின்தடை

அரியலூா் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், தா.பழூா், தழுதாழைமேடு ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை (மே 31) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்நிறுத... மேலும் பார்க்க

அரியலூரில் பழைய இரும்புக் கடை குடோனில் தீ விபத்து

அரியலூரிலுள்ள பழைய இரும்புக் கடை குடோனில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. அரியலூா் ஆயிரங்கால் மண்டபம் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக்கேயன்(51). இவா், அப்பகுதியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் கொள்முதல் ... மேலும் பார்க்க

அரியலூரில் பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

அரியலூரில் வீட்டினுள் பெண் மா்மமான முறையில் இறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. அரியலூா் அரசு கலைக் கல்லூரி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் பாப்பா (44) என்பவா் வச... மேலும் பார்க்க