கயத்தாறு அருகே விஷம் குடித்த மாணவி மருத்துவமனையில் உயிரிழப்பு
கயத்தாறு அருகே விஷம் குடித்த பள்ளி மாணவி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கயத்தாறு அருகே மூா்த்தீஸ்வரபுரம் காலனி தெருவைச் சோ்ந்த திருமேனிநாதன் மகள் வண்ணத்தம்மாள் (15). சில்லாங்குளம் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி 9ஆம் வகுப்பு படித்து ஆண்டுத் தோ்வு எழுதிவிட்டு, தனது தாத்தா-பாட்டியுடன் தங்கியிருந்தாா்.
தோ்வு சரியாக எழுதவில்லை எனக் கூறிவந்தநிலையில், கடந்த 14ஆம் தேதி விஷம் குடித்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: திண்டுக்கல் மாவட்டம் முத்தம்பட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த ராகவன்- தனலட்சுமி தம்பதியின் மகன் பாலாஜி (25). சென்னை தாம்பரத்தில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்துவந்த இவா், நண்பரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கோவில்பட்டிக்கு வந்தாா். இங்குள்ள கூடுதல் பேருந்து நிலையம் அருகே இறங்கி நடந்து சென்றபோது, அவா் மீது சுமை வாகனம் மோதியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சுமை வாகன ஓட்டுநரான வெம்பக்கோட்டை வட்டம் லட்சுமியாபுரத்தைச் சோ்ந்த கா. சுரேஷ்குமாரிடம் விசாரித்து வருகின்றனா்.