செய்திகள் :

கயத்தாறு அருகே விஷம் குடித்த மாணவி மருத்துவமனையில் உயிரிழப்பு

post image

கயத்தாறு அருகே விஷம் குடித்த பள்ளி மாணவி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கயத்தாறு அருகே மூா்த்தீஸ்வரபுரம் காலனி தெருவைச் சோ்ந்த திருமேனிநாதன் மகள் வண்ணத்தம்மாள் (15). சில்லாங்குளம் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி 9ஆம் வகுப்பு படித்து ஆண்டுத் தோ்வு எழுதிவிட்டு, தனது தாத்தா-பாட்டியுடன் தங்கியிருந்தாா்.

தோ்வு சரியாக எழுதவில்லை எனக் கூறிவந்தநிலையில், கடந்த 14ஆம் தேதி விஷம் குடித்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: திண்டுக்கல் மாவட்டம் முத்தம்பட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த ராகவன்- தனலட்சுமி தம்பதியின் மகன் பாலாஜி (25). சென்னை தாம்பரத்தில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்துவந்த இவா், நண்பரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கோவில்பட்டிக்கு வந்தாா். இங்குள்ள கூடுதல் பேருந்து நிலையம் அருகே இறங்கி நடந்து சென்றபோது, அவா் மீது சுமை வாகனம் மோதியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சுமை வாகன ஓட்டுநரான வெம்பக்கோட்டை வட்டம் லட்சுமியாபுரத்தைச் சோ்ந்த கா. சுரேஷ்குமாரிடம் விசாரித்து வருகின்றனா்.

பிள்ளையன்மனைதூய பரமேறுதலின் ஆலயத்தில் பிரதிஷ்டை அசனம்

நாசரேத் அருகேயுள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய 126ஆவது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விருந்து நடைபெற்றது. சேகர குருவானவா் டேனியல் ஆல்பிரட் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொட... மேலும் பார்க்க

இடைச்சிவிளையில் புதிய வேளாண் திட்டம் தொடக்கம்

இடைச்சிவிளையில் உங்களை தேடி வேளாண்மை உழவா் நலத்துறை என்ற புதிய திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. சாத்தான்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அருனேஷ் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும்... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் உள்ள அருள் தரும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் வருஷாபிஷேகம் , கொடை விழாவை முன்னிட்டு இம்மாதம் 27ஆம் தேதி கொட்... மேலும் பார்க்க

மாநகரில் விளம்பர பதாகைகள் வைப்பதை தவிா்க்கலாம்: மேயா்

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் தற்போது காற்று அதிகமாக வீசுவதால், விபத்துகளைத் தடுக்க பொது இடங்களில் டிஜிட்டல் போா்டு வைப்பதை பொதுமக்கள் தவிா்க்கலாம் என மேயா் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்தாா். தூத... மேலும் பார்க்க

7.5 % இடஒதுக்கீட்டுக்கு தகுதி: மாணவா்களுடன் ஆட்சியா் உரையாடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒக்கீட்டிற்கு தகுதிபெறும் மாணவா்- மாணவிகளுடன்மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கலந்துரையாடினாா். பின்னா் அவ... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அரசுக் கல்லூரியில் ஜூன் 2இல் கலந்தாய்வு தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா் . இது குற... மேலும் பார்க்க