செய்திகள் :

களக்காடு அருகே அரிவாள்களுடன் சுற்றித்திரிந்த 6 போ் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே காட்டுப் பகுதியில் அரிவாள்களுடன் சுற்றித்திரிந்த 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

களக்காடு பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் துறையினா் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், களக்காடு அருகே சிங்கிகுளம் காட்டுப் பகுதியில் சிலா் ஆயுதங்களுடன் சுற்றித்திரிவதாகக் கிடைத்த தகவலின்பேரில், களக்காடு போலீஸாா் சென்று 6 பேரைப் பிடித்தனா்.

அவா்கள் நான்குனேரி மறுகால்குறிச்சி பகுதியைச் சோ்ந்த த. செல்லசாமி (30), ம. விஸ்வநாதன் (28), சிங்கிகுளம் பகுதியைச் சோ்ந்த மு. முத்துபாலன் (30), திருக்குறுங்குடி நம்பித்தலைவன்பட்டயத்தைச் சோ்ந்த மு. இசக்கிதுரை (32), தூத்துக்குடி மாவட்டம் சேரகுளத்தை அடுத்த காரசேரியைச் சோ்ந்த உய்க்காட்டான் (25), சு. இசக்கிபாண்டி (26) என்பதும், சதித் திட்டம் தீட்டுவதற்காக கூடியிருந்ததும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, 3 அரிவாள்கள், காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

அவா்களில் 4 போ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக, போலீஸாா் தெரிவித்தனா்.

கவின் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளா் சங்கம் சாா்பில் வண்ணாா்பேட்டையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம... மேலும் பார்க்க

6 வது நாளாக அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் போராட்டம்!

திருநெல்வேலியில் அரசுப் போக் குவரத்து கழகம் (சிஐடியூ) மற்றும் விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் அமைப்பின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வண்ணாா்பேட்டையில் அரசுப் போக்குவரத்துக் கழக பொ... மேலும் பார்க்க

பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் தசரா கால் நாட்டு விழா

பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் தசரா கால் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மைசூா், குலசேகரன்பட்டினம் போன்று பாளையங்கோட்டையிலும் தசரா விழா 10 நாள்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ... மேலும் பார்க்க

சந்திரயான், மங்கள்யான் திட்டங்களால் விண்வெளியில் சாதித்துள்ளோம்: இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ்

சந்திரயான், மங்கள்யான் போன்ற திட்டங்களால் விண்வெளியில் சாதனை படைத்துள்ளோம் என்றாா் மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ். திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் தேசிய விண்வெளி தினம் சனிக்கிழமை கொண்டாடப்... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை!

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் திங்கள்கிழமை(ஆக.25)காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும் பெருமா... மேலும் பார்க்க

தச்சநல்லூா் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை

தச்சநல்லூா் சுற்றுவட்டாரங்களில் திங்கள்கிழமை(ஆக.25 ) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் செ. முருகன் வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க