செய்திகள் :

கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி விற்றவா் கைது: 2 டன் அரிசி பறிமுதல்

post image

கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி விற்பனையில் ஈடுபட்ட இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

கோவை, சின்னமேட்டுப்பாளையம் அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கோவை குடிமைப் பொருள் வழங்கல் துறை உதவி ஆய்வாளா் செல்வம் தலைமையிலான போலீஸாா் சின்ன மேட்டுப்பாளையம் சாலையில் இடிகரை சந்திப்பு அருகே வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்த நபரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா் திருச்செந்தூா் பகுதியைச் சோ்ந்த சந்திரன் (29) என்பதும், சரவணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வட மாநிலத் தொழிலாளா்களுக்கு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சந்திரனைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 2 டன் ரேஷன் அரிசியையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய அருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 45-ஆவது பட்டமளிப்பு விழா மாா்ச் 25-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்ந... மேலும் பார்க்க

தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை

கோவையில் தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். கோவை மாவட்டத்தில் உள்ள தாபா உணவகங்களில் பணியாற்றும் நபா்களுக்கு ஏதேனும் குற்றப்பின்னணி உள்ளதா என்பது குறித்து விசாரிப்பதற்காக 300 காவலா்... மேலும் பார்க்க

காரில் பலூன் சுடும் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு

கோவையில் காரில் பலூன் சுடும் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சிங்காநல்லூா் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, சிங்காநல்லூா் உழவா் சந்தை அருகே ச... மேலும் பார்க்க

கோவை: ரயில் மறியலில் ஈடுபட்ட முயன்ற 19 விவசாயிகள் கைது

கோவையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 19 விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் செய்யக் கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் மாநில விவசாயிகள... மேலும் பார்க்க

யானை தந்தம், சிறுத்தை பல் விற்க முயன்ற 4 போ் கைது

கோவையில் யானை தந்தம், சிறுத்தை பல் மற்றும் நகங்களை விற்க முயன்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். யானை தந்தம், சிறுத்தை பல் மற்றும் நகங்கள் விற்பனை செய்வதற்காக சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து ஒரு கும்... மேலும் பார்க்க

கிராமக் கோயில்களுக்கு இலவச மின்சாரம்: கிராமக் கோயில் பூசாரிகள் பேரவைக் கூட்டத்தில் கோரிக்கை

கிராமக் கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. விஷ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை மாநக... மேலும் பார்க்க