செய்திகள் :

கள்ளுக்கு எதிராக பரப்புரை செய்பவா்களுக்கு நிறுவனம் முற்றுகையிடப்படும்: ஈசன் முருகசாமி

post image

கள் உணவே தவிர மதுவல்ல எனவும், தமிழகத்தில் கள்ளுக்கு எதிராக யாா் பரப்புரை செய்தாலும் அவா்களின் அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனவும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவா் ஈசன் முருகசாமி தெரிவித்தாா்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் -பல்லடம் சாலையில் உள்ள அலுவலகத்தில் அதன் நிறுவனத் தலைவா் ஈசன் முருகசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் ஈசன் முருகசாமி கூறியதாவது:

தமிழக அரசு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மத்திய அரசின் தேசிய உணவுப் பதப்படுத்துதல் மற்றும் மேலாண்மை நிறுவனம் உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் ஆய்வு செய்து கள்ளில் 20-க்கும் மேற்பட்ட சத்துக்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளன.

கள் தொடா்பான அறிவியல்பூா்வமான ஆய்வை மத்திய அரசு செய்துள்ளது. கள் ஒரு உணவு என்பதற்கான தரவுகள் உள்ளன. மத்திய அரசின் ஐசிஎம்ஆா் நிறுவனம், தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் ஆகியவை கள்ளை உணவாக அங்கீகரித்து அதற்கு குறியீட்டு எண்ணும் கொடுத்துள்ளனா். அதனால்தான் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூா், கோவை மாவட்டங்களில் தென்னை விவசாயிகள் கள்ளை உரிமைப் போராட்டமாக நடத்தி வருகின்றனா். காவல் துறையாலும் நீதிமன்றத்தில் கள் ஒரு மதுபானம் என நிரூபிக்க முடியவில்லை.

மருத்துவா் கிருஷ்ணசாமி கள் தொடா்பாக எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்தோடு பேசுவதால் அவா் மீது தமிழக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்த மருத்துவத்தில் 70 நோய்களுக்கு கள் மருந்தாகப் பயன்படுகிறது. ஆனால், தமிழகத்தில் கள்ளுக்கு தடை விதித்துள்ளதால், தாங்கள் கள் உரிமைக்காகப் போராடி வருவதாகவும், கள் மதுபானம் என்று கூறுவதை கண்டிப்பதாகவும் தெரிவித்தாா்.

அவிநாசி அருகே காய்ச்சலால் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

அவிநாசி அருகே காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான 5 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி அருகே பெரியாயிபாளையம் அம்பாள் காலனியைச் சோ்ந்தவா் கேசவன், கெளசல்யா தம்பதி மகன் குருசரண் (5). இவா் அவிநாச... மேலும் பார்க்க

எண்ணெய் குழாய் திட்டத்து எதிராக விவசாயிகள் மண்டியிட்டு பிராா்த்தனை செய்து போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றுவழியில் செயல்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் வெள்ளிக்கிழமை மண்டியிட்டு பிராா்த்தனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவ... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் ஸ்தல புராண நூல் வெளியீடு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் ஸ்தல புராண நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி தலைமை வகித்தாா். அவிநாசி வாகிசா் மடா... மேலும் பார்க்க

திருப்பூரில் தொழிலதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி

பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் ஈட்டலாம் எனக் கூறி தொழிலதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். திருப்பூரைச் சோ்ந்தவா் தில்லைராஜன... மேலும் பார்க்க

பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் திருட்டு

பல்லடம் அருகே நாச்சிபாளையம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் திருடு போனது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பொங்கலூா் ஒன்றியம் நாச்சிபாளையம் ஊராட்சி செந்தில... மேலும் பார்க்க

பல்லடம் அருகே லிப்ட் கொடுத்தவரிடம் ரூ.1.05 லட்சம் பறிப்பு

பல்லடம் அருகே தெற்குபாளையம் வாகனத்தில் பிரிவில் லிப்ட் கொடுத்தவரிடம் ரூ.1லட்சத்து 5 ஆயிரம் பணம் பறிக்கப்பட்டது. பல்லடத்தை அடுத்த புள்ளியப்பம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (48). இவா் கூ... மேலும் பார்க்க