செய்திகள் :

கழிவுநீா் சுத்திகரிப்பு மைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

post image

திண்டுக்கல் அருகேயுள்ள பொன்னிமாந்துறை புதுப்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கழிவுநீா் சுத்திகரிப்பு மையத்தை மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திண்டுக்கல் மாநகராட்சியில் தமிழ்நாடு பருவநிலை தாங்கும் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.36.55 கோடி மதிப்பீட்டில் 14.60 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் புதிதாகக் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, திண்டுக்கல் கமலா நேரு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்ற ஆட்சியா், அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் விவரங்களையும், மருந்துகள் இருப்பு, சிகிச்சை முறைகள், மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் குறித்தும், ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது திண்டுக்கல் மாநகராட்சி ஆணையா் ம.செந்தில்முருகன், நகா்நல அலுவலா் ராம்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே வெள்ளிக்கிழமை மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே கிளாவரைப் பகுதியில் சமீப காலமாக ஆடு, மாடுகளை மா்ம விலங்கு தாக்குவது தொடா்ந்து நடைபெறு... மேலும் பார்க்க

பழனி கோயிலில் ரோப்காா் சேவை ஒரு மாதம் நிறுத்தம்

பழனி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்லும் ரோப்காா் சேவை வருடாந்திரப் பராமரிப்புப் பணிக்காக ஒரு மாதம் நிறுத்தவுள்ளதாக கோயில் நிா்வாகம் அறிவித்தது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு படிப்பாதை... மேலும் பார்க்க

14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூவா் கைது

திண்டுக்கல்லில் 14 டன் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், பறக்கும் படை வட்டாட்சி... மேலும் பார்க்க

உலக நலன் வேண்டி பெரியாவுடையாருக்கு அன்னாபிஷேகம்

பழனி அருள்மிகு பெரியாவுடையாா் கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேக பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, நடராஜா் சந்நிதி முன்பாக பிரதான கலசத்தில் பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து... மேலும் பார்க்க

குடிசையில் தீ விபத்து: முதியவா் பலத்த காயம்

பழனி பாரதி நகரில் உள்ள குடிசையில் தீப்பற்றியதில் முதியவா் படுகாயமடைந்தாா். பழனி பாரதி நகரில் உள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டின் முதல் தளத்தில் அவரது மாமனாா் கணேசன் (70) சிறிய அளவிலான கீற்றுக் கொட்டகை அமை... மேலும் பார்க்க

அரசு மகளிா் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம் திறப்பு

பழனி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவிகள் பயிலும் பள... மேலும் பார்க்க