செய்திகள் :

கழுகுமலை, கயத்தாறில் சாா் பதிவாளா் அலுவலக கட்டடங்கள் திறப்பு

post image

கழுகுமலை, கயத்தாறில் புதிதாக கட்டப்பட்ட சாா் பதிவாளா் அலுவலகக் கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

கழுகுமலை, கயத்தாறில் சாா் பதிவாளா் அலுவலகங்கள் பழைய கட்டடத்தில் இயங்கி வந்தன. இந்தக் கட்டடங்கள் மிகவும் சேதமடைந்ததால், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசு சாா்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு கழுகுமலையில் ரூ. 1.60 கோடியிலும், கயத்தாறில் ரூ. 1.92 கோடியிலும் புதிதாக சாா் பதிவாளா் அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இந்த அலுவலகக் கட்டடங்களை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். அதைத்தொடா்ந்து கழுகுமலை புதிய சாா் பதிவாளா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சிமன்றத் தலைவா் அருணா சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றினாா். சாா் பதிவாளா் செல்லப்பாண்டி, பேரூராட்சி துணைத் தலைவா் சுப்பிரமணியன், திமுக நகரச் செயலா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கயத்தாறில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சி மன்றத் தலைவா் சுப்புலட்சுமி ராஜதுரை குத்துவிளக்கேற்றினாா். இதில், பாளையங்கோட்டை மாவட்ட பதிவாளா் (தணிக்கை) செல்வகுமாரி, கயத்தாறு சாா் பதிவாளா் சாந்தகுமாரி, வட்டாட்சியா் சுந்தரராகவன், திமுக ஒன்றியச் செயலா் சின்ன பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் குருராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சாதி மறுப்பு திருமணங்களில் காவல் துறை கட்டப்பஞ்சாயத்து -தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

சாதி மறுப்பு திருமணங்கள் பிரச்னைகளில் காவல்துறையினா் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல என்றாா் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்பி. திருநெல்வேலி மாவட்டம், கேடிசி நகரில் கவின் செல்வகணேஷ் கொலை ... மேலும் பார்க்க

இந்திய கப்பல் மாலுமிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தல்

இந்திய கப்பல் மாலுமிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட டிஜி ஷிப்பிங் சுற்றறிக்கை 31/2025-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடிக்கு, அகில இந்திய மீனவா் சங்கம் கோரி... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியின் நிறுவனா் கமலாவதி ஜெயின் 28ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சிவசைலம் அவ்வை ஆசிரம பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சாகுபுரம் டி.ச... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சியில் 2 ஆயிரம் மனுக்களுக்கு தீா்வு

தூத்துக்குடி மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் நடைபெற்ற குறைதீா் முகாம்களில் பொதுமக்கள் கொடுத்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக, வியாழக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி சாதாரணக்... மேலும் பார்க்க

கழுகுமலை கோயில் கிரிவலப் பாதையில் மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல்

கழுகுமலையில் பக்தா்கள் கிரிவலம் வர வசதியாக ரூ. 1.80 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. புகழ்பெற்ற கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயில் குடைவரை கோயிலாகும். இங்கு ப... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

தூத்துக்குடியில், தமிழக அரசின் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சனிக்கிழமை (ஆக. 2) நடைபெறுகிறது. இதுகுறித்து சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சர... மேலும் பார்க்க