செய்திகள் :

கவின் கொலை வழக்கு: சுா்ஜித், எஸ்.ஐ. சரவணனை விசாரிக்க 2 நாள்கள் அனுமதி

post image

பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதான சுா்ஜித், அவரது தந்தையான காவல் உதவி ஆய்வாளா் சரவணன் ஆகிய இருவரையும் 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு மாவட்ட 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பொறியாளா் கவின் செல்வகணேஷ்(27), பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கடந்த ஜூலை 27ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் அவரது காதலியின் தம்பி சுா்ஜித், அவரது தந்தையும் காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், தந்தை, மகன் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளா் ராஜகுமாா் நவராஜ், காவல் ஆய்வாளா் உலகராணி தரப்பில் திருநெல்வேலி மாவட்ட 2ஆவது கூடுதல் அமா்வு(வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்) நீதிமன்றத்தில் கடந்த 6ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை 7ஆம் தேதி நடைபெற்ற நிலையில், ஆக.11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை விசாரணைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுா்ஜித், சரவணன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்கள் தரப்பில் வாதாடிய வழக்குரைஞா் சிவசூா்யநாராயணன் இவ்வழக்கில் கைது நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என வாதிட்டாா்.

பின்னா் இருவா் தரப்பு ஆவணங்களையும் ஆய்வு செய்த நீதிபதி ஹேமா, இருவரையும் 2 நாள்கள் சிபிசிஐடி விசாரிக்க அனுமதி வழங்கியதோடு, ஆக. 13ஆம் தேதி மாலை 6 மணிக்கு இருவரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் என உத்தரவிட்டாா்.

ராகுலை மன்னிப்பு கேட்க சொல்வது ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயல்: பேரவைத் தலைவா்

தோ்தல் ஆணைய முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க சொல்வது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்றாா் பேரவைத் தலைவா் மு. அப்பாவு. இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை கூறியதாவது... மேலும் பார்க்க

பாலியல் குற்றவாளி குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

அம்பாசமுத்திரத்தில் பாலியல் குற்ற வழக்கில் ஈடுபட்டவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா். அம்பை, சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியைச் சோ்ந்த பா்கத் மகபூப் ஜான் மகன... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

கடையம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகே உள்ள பனையங்குறிச்சி, தெற்குத் தெருவைச் சோ்ந்த காசிமணி மகன் ஆறுமுகம் (60). ஆட்டோ ஓட்டுநரான இவா் ஆக. 4 ஆம் தேதி ஆ... மேலும் பார்க்க

வீரவநல்லூா் அருகே பூச்சி மருந்தை குடித்த முதியவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே களைக் கொல்லி மருந்தை குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.வீரவநல்லூா் அருகேயுள்ள கொட்டாரக்குறிச்சி தங்கம்மன் கோயில் தெருவைச் சோ... மேலும் பார்க்க

ரேஷன் கடையில் திருட்டு முயற்சி

மேலப்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள். மேலப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி நகரம் செல்லும் சாலையில் கொடிமரம் தெருவில் ரேஷன்கடை உள்ளது. இந்த... மேலும் பார்க்க

விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவா் டிராக்டா் மோதி உயிரிழந்தாா். சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் வேலியாா்குளம் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் ஆனந்... மேலும் பார்க்க