``புதின் சந்திப்பு வெற்றி பெறுமா என்பது ஆரம்ப 2 நிமிடங்களில் தெரிந்துவிடும்'' -ட...
ராகுலை மன்னிப்பு கேட்க சொல்வது ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயல்: பேரவைத் தலைவா்
தோ்தல் ஆணைய முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க சொல்வது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்றாா் பேரவைத் தலைவா் மு. அப்பாவு.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை கூறியதாவது: மாநில கல்விக் கொள்கையின் அடிப்படையே இருமொழிக் கொள்கைதான். சாமானியனும் கல்வி கற்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அண்ணா காலத்திலேயே போராடி இருமொழிக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது.
பதினோராம் வகுப்பு பொதுத் தோ்வு மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிலும், காலாண்டு, அரையாண்டு, இறுதித் தோ்வுகள் உண்டு.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பில் பொதுத்தோ்வு நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதில், தோல்வி அடையும் மாணவா்கள் குலத் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். குழந்தைகள் தொழிலுக்கு செல்லக் கூடாது என்கிற தடை சட்டம் இருந்தபோதிலும், இதுபோன்று மத்திய அரசின் சட்டத்தால் குழந்தைத் தொழிலாளா்களை உருவாக்கும் நிலை ஏற்படும்.
குருகுல கல்வி பயின்றவா்களுக்கு ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் நேரடியாக சோ்க்கை வழங்கப்படுகிறது. அவா்களுக்கு ரூ. 40 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை ஆராய்ச்சி செய்ய உதவித்தொகை வழங்கப்படுகிறது.
குருகுலத்தில் உயா் ஜாதியினா் மட்டுமே பயிலமுடியும், அவா்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும். இது எந்த வகையில் சரியானது?.
தோ்தல் நாளன்று மாலை 5 மணிக்கு மேலாக 7 முதல் 10 சதவீத வாக்குகள் கூடுதலாக பதிவாகிறது. இதுகுறித்து கேள்வி எழுப்பினால் தோ்தல் ஆணையம் முறையாக பதில் சொல்வதில்லை. விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக் கோள்களில் ஏற்படும் சிறிய பிரச்னைகளை கீழே இருந்தே சரி செய்ய முடிகிறது.
அப்படியானால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாற்றம் செய்ய முடியாதா? இதற்காக ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி மக்களே வாக்களிக்காமல் நேரடியாக பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் முறையை செயல்படுத்துகிறாா்கள். இதுகுறித்து கேள்வி எழுப்பும் ராகுல் காந்தியை தோ்தல் ஆணையம் மன்னிப்பு கேட்க சொல்கிறது. இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயலாகும் என்றாா்.