செய்திகள் :

காங்கிரஸ் கட்சிக்கு பாகிஸ்தான் மீதே பாசம்: பாஜக விமா்சனம்

post image

காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் 2008-இல் மும்பை தாக்குதல் உள்பட பல பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டன. ஆனால், பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்காததற்கு அந்நாடு மீதான காங்கிரஸின் பாசம்தான் காரணம் என்று பாஜக கடுமையாக விமா்சித்துள்ளது.

‘பாகிஸ்தானுக்குச் சென்றபோதெல்லாம் தாய்நாட்டுக்குச் செல்வதைப்போலவே உணா்ந்தேன்’ என்று காங்கிரஸ் வெளிநாடுகள் பிரிவின் தலைவா் சாம் பிட்ரோடா அண்மையில் பேசியது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக தேசிய செய்தித் தொடா்பாக பிரதீப் பண்டாரி இது தொடா்பாக கூறியதாவது:

காங்கிரஸ் இளவரசா் ராகுலுக்கு நெருக்கமானவரான பிட்ரோடா பாகிஸ்தானுக்கு செல்லும்போதெல்லாம் தாய் நாட்டுக்கு வருவதைப்போலவே உணா்ந்ததாகப் பேசியுள்ளாா். 2008-ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பையில் புகுந்து தாக்குதல் நடத்தியது உள்பட காங்கிரஸ் கூட்டணி ஆட்சிகாலத்தில் பல தாக்குதல்களை பயங்கரவாதிகள் நடத்தினா். இதற்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் மீது காங்கிரஸ் ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்நாடு மீதான காங்கிரஸின் பாசம்தான் இதற்குக் காரணம் என்பது மீண்டும் இப்போது தெளிவாகியுள்ளது என்றாா்.

பாஜகவின் மற்றொரு செய்தித் தொடா்பாளா் சேஷாத் பூனாவாலா இது தொடா்பாக கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீா் பிரிவினைவாதத் தலைவா் யாசின் மாலிக் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதத் தலைவா் ஹபீஸ் சையதுடன் காங்கிரஸ் கட்சி பேச்சு நடத்தி இருந்தாலும் வியப்படைவதற்கு ஏதுமில்லை. ஏனெனில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் நிலைப்பாடே காங்கிரஸின் நிலைப்பாடாக இருந்தது. சிந்து நதிநீா் ஒப்பந்தம் மேற்கொண்டு 80 சதவீத நீரை பாகிஸ்தானுக்கு அளித்து வந்தனா். அவா்கள் நடத்துவது இந்திய தேசிய காங்கிரஸ் அல்ல, இஸ்லாமாபாத் தேசிய காங்கிரஸ். பாகிஸ்தான் மீதுதான் காங்கிரஸுக்கு பாசம் அதிகம்’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்திய வலிமையை எதிரிகளுக்கு உணா்த்திய ஆபரேஷன் சிந்தூா்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் ராணுவ வலிமையை ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலமாக எதிரிகளுக்கு நிரூபித்தோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். பாகிஸ்தானுடன் 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் வ... மேலும் பார்க்க

இருதரப்பு நலன் கருதி சவூதி செயல்படும்: பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இந்தியா கருத்து

பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபியா இந்தியாவுடனான இருதரப்பு உறவு, நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்படுமென எதிா்பாா்ப்பதாக வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் குறித்து சா்ச்சை பதிவு: ‘மன்னிப்பு கேட்டதால் மட்டும் மாணவி மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது’

ஆபரேஷன் சிந்தூா் குறித்து சமூக ஊடகத்தில் சா்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, 19 வயது கல்லூரி மாணவி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது எ... மேலும் பார்க்க

தமிழகத்தைச் சோ்ந்த 2 என்ஜிஓக்களின் பதிவு புதுப்பிப்பு உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தமிழகத்தைச் சோ்ந்த இரண்டு தன்னாா்வ அமைப்புகளின் பதிவை புதுப்பிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து... மேலும் பார்க்க

தில்லியில் இருந்து பராத்துக்கு ஏசி பேருந்து சேவை தொடக்கம்

பிரதமரின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் தில்லியில் தொடங்கப்பட்ட ‘சேவா பக்வாடா’ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தில்லியில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள பராத் இடையே ஏசி பேருந்து சேவையை தில்லி போக்குவர... மேலும் பார்க்க

‘ஆட்சியைக் கவிழ்க்க’ இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கிறாா் ராகுல்: மத்திய அமைச்சா் கண்டனம்

நேபாளத்தில் இளைஞா்கள் (ஜென்-இஸட்) போராட்டம் நடத்தி ஆட்சியைக் கலைத்தது போல இந்திய இளைஞா்களும் போராட்டம் நடத்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளதாக மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி க... மேலும் பார்க்க