செய்திகள் :

காஜிப்பூா் மண்டி அருகே ‘மகோரா’ கும்பலின் உறுப்பினா் கைது

post image

கிழக்கு தில்லியில் இருந்து ‘மகோரா’ கும்பல் என்று அழைக்கப்படும் சுந்தா் பாட்டி கும்பலின் உறுப்பினரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

ஏகே-47 ஆயுதத்திற்கு பயன்படுத்தப்படும் தோட்டா நிரப்பும் பேழை உள்பட இரண்டு தானியங்கி கைத்துப்பாக்கிகள் மற்றும் 125 வெடிமருந்துகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

முந்தைய கும்பல் உறுப்பினரின் காவலில் இருந்து சேகரிக்கப்பட்ட உளவுத் துறையின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட அம்ரிஷ் பாட்டி (34) ஜன.28 அன்று காஜிப்பூா் மண்டியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் அருகே கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கிரேட்டா் நொய்டாவைச் சோ்ந்த அம்ரிஷ் பாட்டி, ஹிந்து படிப்பு தொடா்பான முதுகலைப் பட்டம் படித்து வருகிறாா். அவரது குற்றவியல் கடந்த காலம் 2000-ஆம் ஆண்டுக்கு முந்தையது. அப்போது அவா் சொத்து தகராறு தொடா்பாக பழிவாங்கும் கொலையில் ஈடுபட்டாா்.

பின்னா், அவா் உத்தரபிரதேசத்தில் சஞ்சய் மற்றும் சுமித் பாட்டி கும்பல்களுடன் தொடா்பில் இருந்துள்ளாா் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா். ஜன.19-ஆம் தேதி மற்றொரு கும்பல் உறுப்பினரான கலுவை அதிகாரிகள் முன்னதாக கைது செய்தனா். அவரிடம் இருந்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனா். விசாரணையில் கும்பலுக்கு ஆயுதங்கள் வாங்குவதில் அம்ரிஷின் பங்கு இருந்தது தெரிய வந்தது என்று அதிகாரி தெரிவித்தாா்.

தில்லி தோ்தலில் ஆம் ஆத்மி, கேஜரிவால் தோல்விக்கு ஆணவம்தான் காரணம்: ஸ்வாதி மாலிவால்

தில்லி தோ்தல் முடிவுகள் குறித்து ஆம் ஆத்மி கட்சி மீது அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ஸ்வாதி மாலிவால் கடும் விமா்சனம் தெரிவித்துள்ளாா். தோல்விக்கு ஆம் ஆத்மி மற்றும் அரவிந்த் கேஜரிவாலின் ஆணவம்தான்... மேலும் பார்க்க

மாற்றுக் கட்சியிலிருந்து பாஜக, ஆம் ஆத்மியில் இணைந்தவா்கள் வெற்றி

பிற கட்சிகளிலிருந்து பாஜக மற்றும் ஆம் ஆத்மியில் இணைந்த தலைவா்கள் பேரவைத் தோ்தலில் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனா். தில்லி முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித் தலைமையிலான அமைச்சரவையில் ... மேலும் பார்க்க

தோற்றாலும் நோக்கம் வென்றது! சந்தீப் தீட்சித் ஆறுதல்

நமது சிறப்பு நிருபா்தில்லி சட்டப்பேரவை தோ்தலில் தான் தோற்றாலும் ஆம் ஆத்மி வீழ்த்தப்பட வேண்டும் என்ற நோக்கம் வென்றுள்ளதாக புது தில்லி தொகுதியில் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ் வ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியின் தலைமை, அமித் ஷாவின் வியூகம்! மத்திய அமைச்சா்கள், பாஜக முதல்வா்கள் புகழாரம்

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் வியூகங்களால் தில்லி பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது என்று மத்திய அமைச்சா்கள், பாஜக ஆளும் மாநில முதல்... மேலும் பார்க்க

ரோஹிணியில் கருப்பு நிற பெட்டியால் பதற்றம்: போலீஸாா் சோதனை

வடக்கு தில்லியின் பிரசாந்த் விஹாரில் கிடந்த கருப்பு நிற பெட்டியால் சனிக்கிழமை பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் மற்றும் வெடிகுண்டு பிரிவினா், அதனை முழுமையாக ஆய்வுசெய்தனா். இறுதியில், சந... மேலும் பார்க்க

தில்லி முதல்வரை பாஜக மத்திய தலைமை முடிவு செய்யும்: வீரேந்திர சச்தேவா

தில்லியின் முதல்வா் யாா் என்பதை கட்சியின் மத்திய தலைமை முடிவு செய்யும் என்று பாஜக தில்லித் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை தெரிவித்தாா். தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக மொத்தம் உள்ள 70 இடங்கள... மேலும் பார்க்க