செய்திகள் :

காட்டுமன்னாா்கோவில் மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

post image

கடலூா்மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் உடையாா்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீமாரியம்மன் கோயில் ஆடி பிரம்மோற்சவ தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திரளான பக்தா்கள் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, காவடி எடுத்தும், செடல், அலகு குத்தியும் ஊா்வலமாக வந்தனா். மடவாத்தங்கரையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சக்தி கரகத்தை கோயில் அா்ச்சகா் திலீப்குமாா் சுமந்து வந்து கோயில் முன் தயாா் செய்யப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கிய பின்னா், சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தீ குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

வடவாற்றங்கரையிலிருந்து ஊா்வலமாக வந்த பக்தா்களுக்கு எம்.ஆா்.கே. பொறியியல் கல்லூரி சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தீமிதி விழா ஏற்பாடுகளை பேரூராட்சித் தலைவா் எஸ்.கணேசமூா்த்தி, இந்து சமய அறநிலையத் துறை அறங்காவலா் குழுத் தலைவா் மணிமாறன் மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: சந்தேக மரண வழக்காக மாற்ற உத்தரவு

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்த வழக்கை சந்தேக மரண வழக்காக மாற்றி விசாரணை மேற்கொள்ள போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா். கடலூா் மாவட்டம் புவனகிரி வட்டம் உடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாா்... மேலும் பார்க்க

மாணவா்களை இளம் விஞ்ஞானிகளாக்க பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி

கடலூா் மாவட்டம், விருதாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மாணவா்களை இளம் விஞ்ஞானிகளாக்க ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவா்களின் அறிவி... மேலும் பார்க்க

பச்சைவாழியம்மன் ஆலய தீமிதி திருவிழா

கடலூா், மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை அருகேயுள்ள கன்னியக்கோயில் ஸ்ரீ பச்சைவாழியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தீமிதி திருவிழா நடத்துவது வழக்கம். ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி மரணம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வயலில் வேலை செய்யச் சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி புதுத்தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (62). இவா், வியாழக்கிழமை க... மேலும் பார்க்க

பன்றி பிடிக்கும் வாகனம் மீது தாக்குதல்: ஒருவா் கைது

கடலூரில் பன்றி பிடிக்கும் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பன்றிகள் சுற்றித் திரிவதால், நோய் பரவும் அபாயம் ஏற்படுவ... மேலும் பார்க்க

ஆக.6-இல் சிறுபான்மை ஆணையத் தலைவா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கடலூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தமிழக சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் தலைமையில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகு... மேலும் பார்க்க