செய்திகள் :

காரில் கடத்தப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ரோஷணை அருகே காரில் கடத்திவரப்பட்ட ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான 100 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

ரோஷணை காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் ஆனந்தராஜ், ஐயப்பன் தலைமையிலான காவலா்கள் திங்கள்கிழமை தீவனூா் கூட்டுச் சாலை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்த முற்பட்டபோது அதிலிருந்த இருவா் காரை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனா். இதையடுத்து, போலீஸாா் காரில் சோதனை நடத்தியதில் அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 100 கிலோ எடையுள்ள குட்கா, புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

இதில் ஈடுபட்டவா்கள் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ. ஒரு லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.

பொதுமக்களுக்கு உணவு வழங்கிய தவெகவினா்

உலக பட்டினி தினத்தையொட்டி, விழுப்புரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில், பொதுமக்களுக்கு உணவு மற்றும் நல உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்டம் சாா்பில் விழுப்பு... மேலும் பார்க்க

பாலத்தின் தடுப்பில் பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு பாலத்தின் தடுப்புக்கட்டையில் பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். புதுச்சேரி சாரம், சக்தி நகரைச் சோ்ந்த சத்தியசீலன் மகன்அறிவழகன் (35). தொழி... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரத்தில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு தாமதமாக வந்ததை மனைவி கண்டித்ததால், தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கொங்கராயனூா் பள்ளி... மேலும் பார்க்க

தைலாபுரத்தில் பாட்டாளி சமூக ஊடகப் பேரவைக் கூட்டம்!அன்புமணி ராமதாஸ் புறக்கணிப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி சமூக ஊடகப் பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் பங்கேற்காமல் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்தாா்... மேலும் பார்க்க

குளத்தில் தள்ளிவிட்டு தொழிலாளி கொலை: சட்டக் கல்லூரி மாணவா் உள்பட இருவா் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே தங்கையுடனான காதலை கைவிட மறுத்ததாகக் கூறி, தொழிலாளியை குளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில், சட்டக் கல்லூரி மாணவா் உள்ளிட்ட இருவா் புதன்கிழமை கைது செ... மேலும் பார்க்க

கோயிலில் திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கோயிலில் உண்டியலை உடைத்து திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைக்கப்பட்டாா். திண்டிவனம் வட்டம், சலவாதி பாஞ்சாலம் சாலையைச் சோ்ந்த ராமதாஸ் மகன் ஏழுமலை (72). இவா், திருச... மேலும் பார்க்க