காரையூா் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழா
பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலில் வைகாசித் திருவிழா கடந்த 18 ஆம் தேதி காப்புக்கட்டப்பட்டு பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் அம்மன் வீதியுலா மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. அதை தொடா்நது விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குப்பின் முத்துமாரியம்மன் தேரில் எழுந்தருளியபின், பக்தா்கள் வடம் பிடிக்க, புறப்பட்ட தோ் தேரோடும் வீதிகளின் வழியே வலம் வந்து தேரடியில் நிலையை அடைந்தது.