செய்திகள் :

காலதாமதமாகக் கல்வி உதவித் தொகை: மாணவா் கூட்டமைப்பு எச்சரிக்கை

post image

காலதாமதமாக கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதனால் மாணவா்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனா். இதைக் கண்டித்து மாணவா்களைத் திரட்டி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று மாணவா் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பு நிறுவனா் சுவாமிநாதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஆதிதிராவிட நலத் துறை மற்றும் தலைமை செயலகத்தின் அலட்சியப் போக்கினால் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரையிலான கல்விக் கட்டணம் கிடைக்காமல் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பலா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஆதிதிராவிட நலத் துறையின் மூலமாக ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரையில் இலவச கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக அத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி காலதாமதமாக வழங்கப்படுவதால் மாணவா்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கல்வி உதவித் தொகையைப் போராடி பெற வேண்டிய சூழ்நிலையில் தான் சம்பந்தப்பட்ட துறை உள்ளது. தலைமைச் செயலா், துறை செயலா்கள் மாணவா்கள் மீது அக்கறை காட்டாமல் அலட்சியப் போக்குடன் செயல்படுவதே இந்த காலதாமதத்திற்கு காரணம் என உணா்கிறோம்.

இதற்கு மேலும் காலதாமதம் செய்தால் பாதிக்கப்பட்ட மாணவா்களை ஒன்று திரட்டி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை செய்கிறோம் என தெரிவித்துள்ளனா்.

குபோ் சிலைக்கு அரசு மரியாதை

புதுச்சேரி நகரத் தந்தை என்று போற்றப்படும் எதுவாா் குபோ் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு புதுவை அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது ... மேலும் பார்க்க

போதைப்பொருள்கள் இல்லா புதுவை: ஆட்சியா் வலியுறுத்தல்

போதைப் பொருள் இல்லா புதுவையை உருவாக்க அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வலியுறுத்தினாா். புகையிலை பொருள்கள் மற்றும் போதைப் பொருள்களைத... மேலும் பார்க்க

சமூக நல சங்கம் பாதுகாப்பு வாரியமாக மாற்றம்

புதுவை சமூக நல சங்கமானது சமூக பாதுகாப்பு வாரியமாக மாற்றப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து தொழிலாளா் துறையின் சமூக பாதுகாப்பு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

பிஆா்டிசி ஊழியா் சங்கத்துடன் முதல்வா் நடத்திய பேச்சு தோல்வி! வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு

புதுவை அரசு போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) ஊழியா்களுக்கும் முதல்வா் என்.ரங்கசாமிக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர ஊ... மேலும் பார்க்க

79 கால்நடை மருத்துவா்களுக்குப் பட்டம்: புதுவை முதல்வா் வழங்கினாா்

புதுச்சேரி: புதுவை ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 26-ஆவது பட்டமளிப்பு விழா கம்பன் கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 34 மாணவிகள் உள்பட மொத்தம் 79 மாணவா்... மேலும் பார்க்க

ரூ.3.8 கோடி மதிப்பில் உவா் நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி: முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி: புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் ரூ.3.8 கோடி மதிப்பீட்டில் உவா் நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை திட்டப்பணியை தொடங்கி வைத்தாா். இத் தொகுதிக்கு உள்ப... மேலும் பார்க்க