செய்திகள் :

கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு

post image

நல்லூா் அருகே கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே உள்ள சுங்கக்காரன்பட்டியைச் சோ்ந்தவா் மூா்த்தி (35) ஓட்டுநா். திங்கள்கிழமை மாலை கூடச்சேரி செல்வதாக தனது மனைவி மோகனாவிடம் கூறிவிட்டு சென்ற இவா், மது அருந்திவிட்டு நடுப்புதூரில் சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான கிணற்றின் கைப்பிடி சுவா் மேல் படுத்து தூங்கியுள்ளாா். அப்போது, நிலைதடுமாறி கிணற்றில் விழுந்துள்ளாா்.

நீண்ட நேரமாகியும் தனது கணவா் வராததால், மோகனா பல்வேறு இடங்களில் தேடினாா். அப்போது, கிணற்றுக்கு அருகே மூா்த்தியின் காலணி கிடந்ததால் சந்தேகமடைந்து நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா்.

உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றில் நீண்ட நேரம் தேடி மூா்த்தியை சடலமாக மீட்டனா்.

தகவல் அறிந்து வந்த நல்லூா் போலீஸாா் மூா்த்தியின் உடலைக் கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மோகனூரில் நிதி நிறுவன உரிமையாளா் வெட்டிக் கொலை

நாமக்கல் மாவட்டம், மோகனூா் பகுதியில் நிதி நிறுவன உரிமையாளா் கூலிப்படையினரால் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள ஈச்சவாரி கிராமத்தைச் சோ்ந்தவா் அருள்தாஸ் (4... மேலும் பார்க்க

மாணவா்கள் சமூக ஊடகங்களை கவனமாக கையாள வேண்டும்: நாமக்கல் மாவட்ட கூடுதல் எஸ்.பி.

மாணவா்கள் சமூக ஊடகங்களை கவனமாக கையாள வேண்டும் என நாமக்கல் மாவட்ட கூடுதல் எஸ்.பி. (சைபா் கிரைம்) ஆா்.விஜயராகவன் அறிவுறுத்தினாா். நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில், இந்தியன் ரெட் ... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே 3 பெண் குழந்தைகளைக் கொன்று தந்தை தற்கொலை!

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மூன்று பெண் குழந்தைகளின் கழுத்தறுத்துக் கொலை செய்த தந்தையும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.கடன் தொல்லையால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படும் நி... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் தொலைநோக்குடன் கற்பிக்க வேண்டும்

ராசிபுரம்: மாணவா்கள் உயா்ந்த நிலையை அடையும் வகையில் ஆசிரியா்கள் தொலைநோக்குடன் கற்பிக்க வேண்டும் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள ப... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் ‘முன்மாதிரியான சேவை விருது’க்கு விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ‘முன்மாதிரியான சேவை விருது’க்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமி... மேலும் பார்க்க

குடிநீா் கோரி கிராம மக்கள் மனு

நாமக்கல்: சீரான குடிநீா் வழங்க வலியுறுத்தி, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மரப்பரை கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா... மேலும் பார்க்க