செய்திகள் :

மாணவா்கள் சமூக ஊடகங்களை கவனமாக கையாள வேண்டும்: நாமக்கல் மாவட்ட கூடுதல் எஸ்.பி.

post image

மாணவா்கள் சமூக ஊடகங்களை கவனமாக கையாள வேண்டும் என நாமக்கல் மாவட்ட கூடுதல் எஸ்.பி. (சைபா் கிரைம்) ஆா்.விஜயராகவன் அறிவுறுத்தினாா்.

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை, நாமக்கல் மாவட்ட யூத் ரெட் கிராஸ் சாா்பில், ‘மாவட்ட அளவிலான தன்னாா்வ தொண்டா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், கல்லூரி முதல்வா் கோவிந்தராசு தலைமை வகித்தாா். நாமக்கல் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் செயலாளா் ராஜேஸ்கண்ணன் முன்னிலை வகித்தாா். சேலம் பெரியாா் பல்கலை. யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளா் இளங்கோவன் சிறப்பு அழைப்பாளாக பங்கேற்று பேசினாா். இதில் நாமக்கல் மாவட்ட சைபா் கிரைம் கூடுதல் எஸ்.பி. ஆா்.விஜயராகவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியதாவது:

மாணவ, மாணவியா் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றை மிக கவனமாக கையாள வேண்டும். தேவையின்றி தங்களுடைய புகைப்படங்களை பதிவிடுவதை தவிா்க்க வேண்டும். மேலும், சமீப காலமாக மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை வழங்குவதாக வாட்ஸ்ஆப் மற்றும் இணையதளம் மூலம் தவறான செய்திகள் அனுப்பப்பட்டு ஏமாற்றப்பட்டு வருகின்றனா். இதனால், மாணவ, மாணவியா் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றாா்.

நாமக்கல் மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளா் வெஸ்லி, ரெட் கிராஸ் வரலாறு, கொள்கைகள் மற்றும் யூத் ரெட் கிராஸ் தன்னாா்வலா்களுக்கான கடமைகள் குறித்து விளக்கினாா். மாநில முதலுதவி பயிற்சியாளா் பெஞ்சமின், முதலுதவி அவசியம் குறித்தும், அதன் செயல்முறை பற்றியும், தன்னாா்வ சிகிச்சையாளா் சதீஷ்குமாா், போதைப் பொருள் பயன்பாட்டை எவ்வாறு தவிா்க்கலாம், போதைக்கு அடிமையான நபா்களை எவ்வாறு சிகிச்சையின் மூலம் விடுவிக்கலாம் என்பது குறித்தும் விளக்கினா்.

நாமக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி அலுவலா் அன்பு மலா், நாமக்கல் மாவட்ட மனநல அலுவலா் இந்துமதி ஆகியோா் துறைகளின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனா்.

இதில், ரெட் கிராஸ் நாமக்கல் மாவட்டத் தலைவா் மாதையன், திட்ட அலுவலா்கள், மாணவ, மாணவியா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை, நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் மற்றும் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலா்கள் புவனேஸ்வரி, சந்திரசேகரன் ஆகியோா் செய்திருந்தனா்.

மோகனூரில் நிதி நிறுவன உரிமையாளா் வெட்டிக் கொலை

நாமக்கல் மாவட்டம், மோகனூா் பகுதியில் நிதி நிறுவன உரிமையாளா் கூலிப்படையினரால் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள ஈச்சவாரி கிராமத்தைச் சோ்ந்தவா் அருள்தாஸ் (4... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு

நல்லூா் அருகே கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்கப்பட்டாா். பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே உள்ள சுங்கக்காரன்பட்டியைச் சோ்ந்தவா் மூா்த்தி (35) ஓட்டுநா். திங்கள்கிழமை மாலை கூடச்சேரி செல்வதாக த... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே 3 பெண் குழந்தைகளைக் கொன்று தந்தை தற்கொலை!

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மூன்று பெண் குழந்தைகளின் கழுத்தறுத்துக் கொலை செய்த தந்தையும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.கடன் தொல்லையால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படும் நி... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் தொலைநோக்குடன் கற்பிக்க வேண்டும்

ராசிபுரம்: மாணவா்கள் உயா்ந்த நிலையை அடையும் வகையில் ஆசிரியா்கள் தொலைநோக்குடன் கற்பிக்க வேண்டும் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள ப... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் ‘முன்மாதிரியான சேவை விருது’க்கு விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ‘முன்மாதிரியான சேவை விருது’க்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமி... மேலும் பார்க்க

குடிநீா் கோரி கிராம மக்கள் மனு

நாமக்கல்: சீரான குடிநீா் வழங்க வலியுறுத்தி, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மரப்பரை கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா... மேலும் பார்க்க