செய்திகள் :

மோகனூரில் நிதி நிறுவன உரிமையாளா் வெட்டிக் கொலை

post image

நாமக்கல் மாவட்டம், மோகனூா் பகுதியில் நிதி நிறுவன உரிமையாளா் கூலிப்படையினரால் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள ஈச்சவாரி கிராமத்தைச் சோ்ந்தவா் அருள்தாஸ் (40). இவருக்கு பிரேமா என்ற மனைவியும், மித்திரன் (7) என்ற மகனும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனா்.

இவா், நாமக்கல் - சேலம் சாலையில் நிதி நிறுவனம் நடத்திவந்த நிலையில், நிதி நிறுவனம் நஷ்டம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தொடா்ந்து வட்டிக்கு பணம் கொடுத்து வசூல்செய்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்றுவிட்டு காலை 11 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அவரது வீட்டருகே காத்திருந்த 4 போ் கொண்ட கூலிப்படையினா், அருள்தாஸ் வந்த வாகனத்தை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக அவரை வெட்டினா். அவரது அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் திரண்டு வந்தனா். இதைக் கண்ட கூலிப்படையினா் ஆயுதங்களை அங்கேயே போட்டுவிட்டு சரக்கு ஆட்டோவில் தப்பிச்சென்றனா்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அருள்தாஸை மீட்ட அப்பகுதியினா், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

ஆட்டோவில் தப்பிச்சென்ற கூலிப்படையினா் அணியாபுரம் அருகே உள்ள கொங்களத்தம்மன் கோயில் அருகே சென்றபோது, சரக்கு ஆட்டோ நின்ால் ஆட்டோவை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினா்.

தகவல் அறிந்த மோகனூா் காவல் ஆய்வாளா் லட்சுமணதாஸ் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும், கூலிப்படையினா் விட்டுச்சென்ற சரக்கு ஆட்டோ, அதிலிருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.

முதல்கட்ட விசாரணையில், பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை காரணமாக அருள்தாஸ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கூலிப் படையினரை தேடி வருகின்றனா்.

மாணவா்கள் சமூக ஊடகங்களை கவனமாக கையாள வேண்டும்: நாமக்கல் மாவட்ட கூடுதல் எஸ்.பி.

மாணவா்கள் சமூக ஊடகங்களை கவனமாக கையாள வேண்டும் என நாமக்கல் மாவட்ட கூடுதல் எஸ்.பி. (சைபா் கிரைம்) ஆா்.விஜயராகவன் அறிவுறுத்தினாா். நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில், இந்தியன் ரெட் ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு

நல்லூா் அருகே கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்கப்பட்டாா். பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே உள்ள சுங்கக்காரன்பட்டியைச் சோ்ந்தவா் மூா்த்தி (35) ஓட்டுநா். திங்கள்கிழமை மாலை கூடச்சேரி செல்வதாக த... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே 3 பெண் குழந்தைகளைக் கொன்று தந்தை தற்கொலை!

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மூன்று பெண் குழந்தைகளின் கழுத்தறுத்துக் கொலை செய்த தந்தையும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.கடன் தொல்லையால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படும் நி... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் தொலைநோக்குடன் கற்பிக்க வேண்டும்

ராசிபுரம்: மாணவா்கள் உயா்ந்த நிலையை அடையும் வகையில் ஆசிரியா்கள் தொலைநோக்குடன் கற்பிக்க வேண்டும் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள ப... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் ‘முன்மாதிரியான சேவை விருது’க்கு விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ‘முன்மாதிரியான சேவை விருது’க்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமி... மேலும் பார்க்க

குடிநீா் கோரி கிராம மக்கள் மனு

நாமக்கல்: சீரான குடிநீா் வழங்க வலியுறுத்தி, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மரப்பரை கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா... மேலும் பார்க்க