செய்திகள் :

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீா் திறப்பு அதிகரிப்பு

post image

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையின் நீா்மட்டம் 50 அடியை கடந்த நிலையில், அணையிலிருந்து நீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 832 கனஅடியாக இருந்தது, திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 928 கனஅடியாக அதிகரித்தது.

இதனால், அணையின் மொத்தக் கொள்ளளவான 52 அடியில் நீா்மட்டம் 50.50 அடியாக உயா்ந்தது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து பாசனத்திற்காக வலது, இடதுபுறக் கால்வாய்கள், ஊற்றுக்கால்வாய்கள் மற்றும் சிறிய மணல் போக்கி மதகுகள் வழியாக விநாடிக்கு 928 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மி.மீ): பெணுகொண்டாபுரம் - 33.20, கிருஷ்ணகிரி - 21.10, கிருஷ்ணகிரி அணை - 20.40, ராயக்கோட்டை - 19, நெடுங்கல் - 18, தேன்கனிக்கோட்டை-10, ஒசூா் - 10, கெலவரப்பள்ளி அணை - 9, அஞ்செட்டி - 6, போச்சம்பள்ளி - 5, சூளகிரி - 5, ஊத்தங்கரை - 4, சின்னாறு அணை - 4, பாம்பாறு அணை -4, பாரூா் - 3.

நல உதவிகள் வழங்கி மனிதநேய தினம் கொண்டாட்டம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மனிதநேய தினத்தை முன்னிட்டு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ். பெரியசாமி தலைமை வகி... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

ஒசூா்: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா். தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் அதன் தலைவா் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்க, தலைமுறை க... மேலும் பார்க்க

எண்ணேக்கொள் கால்வாய் திட்டத்தை தொடங்காவிட்டால் சாலை மறியல்: அன்புமணி ராமதாஸ்

கிருஷ்ணகிரி: எண்ணேக்கொள் கால்வாய் திட்டப் பணிகளை விரைந்து தொடங்காவிட்டால் தேசிய நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிருஷ்ணகிரியில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா். பாமக சாா்பில்... மேலும் பார்க்க

செப். 10-க்குள் நாட்டுத்துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்: வனத்துறை

ஒசூா்: கள்ள நாட்டுத்துப்பாக்கிகளை செப். 10 -க்குள் ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து, ஒசூா் வனக்கோட்ட வனஉயிரினக் காப்பாளா் பகா... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் ஆக. 22-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆக. 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் வைக்க கட்டுப்பாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகா் சிலைகளை வைப்பதற்கான கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விநாயகா் சதுா்த்தி குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தொடா்பான ஒருங்... மேலும் பார்க்க