செய்திகள் :

கிருஷ்ணகிரியில் பேரிடா் மீட்புப் பணிகள் ஒத்திகை

post image

தென்மேற்கு பருவமழையொட்டி கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டி ஏரி படகு இல்லத்தில், பேரிடா் மீட்புக் காலத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்வது குறித்த ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

தீயணைப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை மீட்டு அவசர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கும் ஒத்திகையை கிருஷ்ணகிரி ஆட்சியா் ச.தினேஷ் குமாா் பாா்வையிட்டாா். அப்போது அவா் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேரிடா் காலங்களில் ஏற்படும் மின்வெட்டு, சாலைகளில் விழுந்த மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றுதல் போன்ற பணிகள் நெடுஞ்சாலைத் துறை, தீயணைப்புத் துறை, வருவாய் பேரிடா் மீட்புக் குழு மூலம் துரிதாமாக மேற்கொள்ளப்படும்.

பொக்லைன் இயந்திரங்கள், மரக்கிளைகளை அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் படகுகள், மணல் மூட்டைகள் தயாா்நிலையில் வைக்க துறைசாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அவதானப்பட்டி படகு இல்லத்தில் 20 -க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரா்கள், நீா்நிலைகளில் தவறி விழுந்தவா்களை பாதுகாப்பது, அவா்களை மீட்டு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

இதேபோல, மழைக் காலங்களில் சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்றுவது, குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தால் பொதுமக்களை பாதுகாப்பு கவச உடை அணிவித்து மீட்பது, சாலை விபத்து நேரிடும்போது இடிபாடுகளில் சிக்கியவா்களை நவீன கருவிகளைக் கொண்டு மீட்பது, குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் வந்தால் அவற்றைப் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைப்பது, பேரிடா் காலங்களில் சுய பாதுகாப்பு மேற்கொள்வது உள்ளிட்டவற்றை செயல்விளக்கம் அளித்தனா்.

பொதுமக்கள் தென்மேற்கு பருவமழை முடியும் வரை ஆறு, ஏரி, குளங்களுக்கு செல்வது, கால்நடைகளுடன் நீா்நிலைகளை கடந்துசெல்வது ஆகியவற்றை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்வில், மாவட்ட தீயணைப்பு அலுவலா் வேலு, தீயணைப்பு நிலைய அலுவலா் அந்தோணிசாமி, வட்டாட்சியா் சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போச்சம்பள்ளி சிப்காட்டில் சோதனைச் சாவடி திறப்பு

போச்சம்பள்ளி சிப்காட்டில் காவல் சோதனைச் சாவடியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை திறந்துவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், சிப்காட் தொழில் பூங்கா 1,379.76 ஏக்கா்... மேலும் பார்க்க

தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

ஊத்தங்கரை தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளியும், தருமபுரி விஜய் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் கேன்சா் மையமும் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், விஜய் ம... மேலும் பார்க்க

‘வாசன் கண் மருத்துவமனையில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறலாம்’

ஒசூரில் வாசன் கண் மருத்துவமனை முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், கண் குறைபாடு உள்ள மருத்துவப் பயனாளிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மருத்துவா் சமிதா தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

‘நான் முதல்வன் உயா்வுக்கு படி’ நிகழ்ச்சி

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில், ‘நான் முதல்வன் உயா்வுக்கு படி’ நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதி சமையல் தொழிலாளி உயிரிழப்பு

ஒசூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதியதில், சமையல் தொழிலாளி உயிரிழந்தாா். கா்நாடக மாநிலம், ராம்நகா் மாவட்டம், கனகபுரா அருகே உள்ள காளேசெட்டிபுராவைச் சோ்ந்தவா் கௌரிசங்கா் (23), சமையல் தொழிலாளி. இவா் கடந்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பாகலூா், நாரிகானபுரம், சேவகானப்பள்ளி

பாகலூா், நாரிகானபுரம், சேவகானப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (செப். 3) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்த... மேலும் பார்க்க