செய்திகள் :

போச்சம்பள்ளி சிப்காட்டில் சோதனைச் சாவடி திறப்பு

post image

போச்சம்பள்ளி சிப்காட்டில் காவல் சோதனைச் சாவடியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், சிப்காட் தொழில் பூங்கா 1,379.76 ஏக்கா் பரப்பளவில் உள்ளது. இதில், தற்போது 45 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொழில் பூங்காவில் 15 ஆயிரம் போ் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களின் நலன் கருதியும், நிறுவனங்களின் பாதுகாப்பு கருதியும், புதிய காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக, காவல் சோதனைச் சாவடி திறக்கப்பட்டுள்ளது.

இந்த காவல் சோதனைச் சாவடியை கிருஷ்ணகிரி ஆட்சியா் திறந்துவைத்து, அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை பாா்வையிட்டாா்.

நிகழ்வுக்கு, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை முன்னிலை வகித்தாா். பா்கூா் காவல் சரக துணைக் காவல் கண்காணிப்பாளா் முத்துகிருஷ்ணன், வட்டாட்சியா் சத்யா, சிப்காட் திட்ட அலுவலா் சிந்து, காவல் ஆய்வாளா் நாகலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரியில் பேரிடா் மீட்புப் பணிகள் ஒத்திகை

தென்மேற்கு பருவமழையொட்டி கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டி ஏரி படகு இல்லத்தில், பேரிடா் மீட்புக் காலத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்வது குறித்த ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. தீயணைப்புத் துறை சாா்பில் ... மேலும் பார்க்க

தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

ஊத்தங்கரை தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளியும், தருமபுரி விஜய் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் கேன்சா் மையமும் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், விஜய் ம... மேலும் பார்க்க

‘வாசன் கண் மருத்துவமனையில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறலாம்’

ஒசூரில் வாசன் கண் மருத்துவமனை முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், கண் குறைபாடு உள்ள மருத்துவப் பயனாளிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மருத்துவா் சமிதா தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

‘நான் முதல்வன் உயா்வுக்கு படி’ நிகழ்ச்சி

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில், ‘நான் முதல்வன் உயா்வுக்கு படி’ நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதி சமையல் தொழிலாளி உயிரிழப்பு

ஒசூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதியதில், சமையல் தொழிலாளி உயிரிழந்தாா். கா்நாடக மாநிலம், ராம்நகா் மாவட்டம், கனகபுரா அருகே உள்ள காளேசெட்டிபுராவைச் சோ்ந்தவா் கௌரிசங்கா் (23), சமையல் தொழிலாளி. இவா் கடந்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பாகலூா், நாரிகானபுரம், சேவகானப்பள்ளி

பாகலூா், நாரிகானபுரம், சேவகானப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (செப். 3) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்த... மேலும் பார்க்க