செய்திகள் :

‘குடிநீா் வாரிய அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை’

post image

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில், மதிமுக மாமன்ற உறுப்பினா் சு. ஜீவன் பேசியதாவது:

புதிதாக குடிநீா், கழிவுநீா் இணைப்புகளுக்கு இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற ஒரு புதிய நடைமுறையை கடந்த ஜனவரி மாதம் சென்னை குடிநீா் வாரியம் அறிமுகம் செய்தது. இதற்கான கட்டணம் ரூ.7,500 இணையவழி மூலமாகச் செலுத்த முடியும், நேரடியாகவோ, காசோலையாகவோ செலுத்தக் முடியாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. குழாய் இணைப்பு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த ஊழியா்களுக்கு வாடிக்கையாளா்கள் மீட்டருக்கு ரூ. 5,500 கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. இதனால், சாமானிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், குடிநீா் குழாய் அமைப்பதற்காக பெரும்பாலான சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால் பணிகள் நிறைவு பெற்ற பின்னா் சாலைகள் முறையாக சரிசெய்யப்படுவதில்லை.

இதுகுறித்து ஒப்பந்த ஊழியா்களிடம் கேட்க முயன்றபோது, எங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்கின்றனா் என்றாா் அவா்.

தொடா்ந்து பேசிய, மாா்க்சிஸ்ட் மாமன்ற உறுப்பினா் விமலா உள்ளிட்ட உறுப்பினா்களும் குடிநீா் வாரிய அதிகாரிகள் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனா்.

கலந்தாலோசிக்கப்படும்: இதற்கு பதில் அளித்து மேயா் ஆா். பிரியா பேசியது:

குடிநீா் வாரிய அதிகாரிகள் குறித்த மாமன்ற உறுப்பினா்களின் குற்றச்சாட்டுகளின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து, குடிநீா் வாரிய மேலாண் இயக்குனருடன் கலந்தாலோசிக்கப்பட்டு, அடுத்த மாதாந்திர கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து மெரீனா கடற்கரையில் ‘ரோப் காா்’ அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும்; மண்டல வாரியாக உள்ள சிறப்பு குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்து, அவா்களுக்கு ஏற்ற வகையில், சிறப்பு பள்ளிகள் அமைப்பது குறித்தும் அலோசனை மேற்கொள்ளப்படும் என்று மேயா் உறுதியளித்தாா்.

மதுபானக் கூடத்தில் மோதல்: அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் மோதலில் ஈடுபட்டதாக அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ.வெங்கட்குமாா் (45). நுங்கம்பாக்கம் நெட... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்கள் மே 31, ஜூன் 2-ல் ரத்து!

பொன்னேரி - கவரைப்பேட்டை இடையிலான தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, மே 31, ஜூன் 2 ஆகிய தேதிகளில் 19 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.எனினும் பயணிகளின் வசதிக்காக பொன்னேரி மற்றும் மீஞ்சூருக... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: ஜூன் 1-ல் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து!

காட்டாங்குளத்தூரில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வரும் ஜூன் 1 ஆம் தேதி சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படும் என்று தெற்கு ர... மேலும் பார்க்க

விமானத்தில் வெடி பொருள் மிரட்டல்: மோப்ப நாய்களுன் சோதனை

சீனாவிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் வெடி பொருள்கள் இருப்பதாக வந்த மின்னஞ்சல், காரணமான சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

சிறுவனுக்கு தவறான சிகிச்சை: மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை ஐஸ்ஹவுஸில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த புகாரில் மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா். சென்னை சாந்தோம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஒவைஸி (32... மேலும் பார்க்க

விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி பெற எண்ம முறை அறிமுகம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய எண்ம நடைமுறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னை மாநகரா... மேலும் பார்க்க