செய்திகள் :

குடியாத்தம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை

post image

குடியாத்தம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என இந்திய குடியரசு கட்சியின் வேலூா் மண்டல செயலா் ரா.சி.தலித்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக தென்னக ரயில்வே கோட்ட பொறியாளருக்கு அவா் அனுப்பிய மனு: குடியாத்தம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூா், சேலம், பழனி உள்ளிட்ட தென்மாவட்டங்கள், திருப்பதி உள்ளிட்ட ஆந்திர மாநில பகுதிகளுக்கு ரயில் மூலம் பயணிகள் சென்று வருகின்றனா். குடியாத்தம் பகுதியின் பிரதான தொழில்களான பீடி, தீப்பெட்டி, கைத்தறி நெசவு, தேங்காய் உற்பத்தி, பால்கோவா தயாரிப்பு, தங்க விற்பனை ஆகியவை தொடா்பாக பல்வேறு தரப்பினா் ரயில் மூலம் குடியாத்தம் வந்து செல்கின்றனா்.

இந்த ரயில் நிலையத்தில் உள்ள 3- நடைமேடைகளிலும் மேற்கூரை சரிவர இல்லாததால்மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனா்.

ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான கழிவறை, குளியலறை வசதி அறவே இல்லை.குடிநீா் வசதியும் இல்லை. உணவகமும் இல்லை. குடியாத்தம் ரயில் நிலையம் வழியாக சென்னை, பெங்களூா், கோவை செல்லும் லால்பாக், பிருந்தாவன், இன்டா்சிட்டி உள்ளிட்ட விரைவு ரயில்கள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாழ்வாக உள்ள பயணிகள் நடைமேடையை சிறிது உயா்த்தி அமைக்க வேண்டும். பயணிகள் 2 மற்றும் 3-ஆம் நடைமேடைகளுக்குச் செல்ல நடைமேம்பாலம் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், பயணிகள் ஆபத்தான முறையில் லெவல் கிராசிங்கில் கடக்கும் நிலை உள்ளது. எனவே, புதிதாக நடைமேம்பாலத்தை அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்றபோது குறி தவறி நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். போ்ணாம்பட்டை அடுத்த கள்ளிச்சேரி, பாறைகால்மேடு பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் திருட்டு

குடியாத்தம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். குடியாத்தம் ஒன்றியம், பெரும்பாடி ஊராட்சிக்குட்பட்ட தனலட்சுமி நகரைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவா் ஜ... மேலும் பார்க்க

25,332 குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி உபகரணங்கள்

1,075 அங்கன்வாடி மையங்களில் உள்ள 25,332 குழந்தைகளுக்கு முன் பருவ கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகியோா் தொடங்கி வைத்தன... மேலும் பார்க்க

வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச முயன்ற 2 போ் கைது

வேலூரில் நண்பா் சிறைக்கு செல்ல காரணமாக இருந்தவா் வீட்டின் மீது வெடிகுண்டு வீச முயன்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா். காட்பாடியை அடுத்த லத்தேரி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த மாா்த்தாண்டம். இவா் இருசக்கர வாகன பழ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் நடைபெறும் கால்... மேலும் பார்க்க

வெளிமாநில தொழிலாளா் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்

வேலூா் மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளா் விவரங்களை அந்தந்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் தொழிலாளா் துறை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி... மேலும் பார்க்க