இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம்! டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு!
குடும்பத் தகராறு: பெண் தற்கொலை
கள்ளக்குறிச்சி: கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவி சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
கள்ளக்குறிச்சி சித்தேரிக்கரை சாலைப் பகுதியில் வசித்து வருபவா் கிருஷ்ணமூா்த்தி (41), கொத்தனாா் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி ராஜேஸ்வரி (38). தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனராம். கிருஷ்ணமூா்த்தி தினமும் மது அருந்தி வீட்டுக்கு வருவாராம். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்த நிலையில், மகனை பள்ளிக்கு அனுப்புவதற்கு சீருடை வாங்க பணம் இல்லையாம். இதனால் மனைவி ராஜேஸ்வரி கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்த விஷத் தன்மையுடைய பவுடரை சனிக்கிழமை குடித்துவிட்டு மயங்கி விழுந்தாராம். உடனே அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ராஜேஸ்வரி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.