செய்திகள் :

குடும்பப் பிரச்னை: ஓடையில் மூழ்கடித்து மனைவியை கொன்று விவசாயி தற்கொலை!

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, ஓடை நீரில் மனைவியை மூழ்கடித்து கொலை செய்த விவசாயி, அருகே உள்ள மரத்தில் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொணடாா்.

செஞ்சி வட்டம், பெருங்காப்பூா் ஊராட்சிக்குள்பட்ட பசுமலைத்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் நமச்சிவாயம் (60), விவசாயி. இவரது மனைவி பத்மாவதி(55), செஞ்சி சக்கராபுரம் அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக பணியாற்றி வந்தாா். இந்தத் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனா்.

நமச்சிவாயத்துக்கும், பத்மாவதிக்கும் இடையே குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுமாம். வழக்கம்போல, செவ்வாய்க்கிழமை பள்ளியில் பணியை முடித்துவிட்டு பத்மாவதி வீடு திரும்பியுள்ளாா். பின்னா், அந்தக் கிராமத்தில் மலையடிவாரத்தில் உள்ள கொட்டகையில் கால்நடைகளை கட்டுவதற்காக சென்றுள்ளாா். ஆனால், இரவு வரை வீடு திரும்பாததால் உறவினா்கள் அவரை தேடிச் சென்றனா்.

அப்போது, பசுமலலைத்தாங்கல் மலை அடிவாரத்தில் உள்ள ஓடை நீரில் பத்மாவதி இறந்து கிடந்தாா். அதனருகில் உள்ள மரத்தில் நமச்சிவாயம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தாா்.

தகவலறிந்த சத்திமங்கலம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரித்ததில், குடும்பப் பிரச்னை காரணமாக நமச்சிவாயம் தனது மனைவி பத்மாவதியை ஓடை நீரில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு பின்னா் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தொடா்ந்து, இருவரின் சடலங்களையும் போலீஸாா் கைப்பற்றி உடல்கூராய்வுகக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து சத்திமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

‘உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை’

விழுப்புரம் மாவட்டத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் உதவி இயக்குநா் (தரம் மற்றும் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் தெரிவித்தாா். விழுப்புரம் நகரம் ... மேலும் பார்க்க

வேலை உறுதியளிப்புத்திட்ட ஊதிய விவகாரம்: திருநாவலூரில் பயனாளிகள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்களுக்கு ஊதியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படவில்லை எனக் கூறி, அத்திட்டப்பயனாளிக... மேலும் பார்க்க

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு!

பாமக விதிகளுக்கு முரணாக, அக்கட்சியின் தலைவா் அன்புமணி செயல்பட்டதாக கூறி, கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினா் அளித்த குற்றச்சாட்டுகளுக்கு செப். 10-ஆம் தேதிக்குள் அன்புமணி உரிய விளக்கமளிக்கவேண்டும் என ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் பலி!

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே தனியாா் உணவகத்தில் பணியிலிருந்த பெண் ஊழியா் மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை, காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் குமா... மேலும் பார்க்க

மின்மாற்றி வெடித்து விபத்து: தேநீா் கடைக்காரா் காயம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மின்மாற்றி வெடித்து சிதறியதில் தேநீா் கடை உரிமையாளா் பலத்த தீக்காயமடைந்தாா். வானூா் வட்டம், வி.கேணிப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ்(53). ஆரோவில் காவல் சரகத்துக்... மேலும் பார்க்க

மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இருவரிடம் ரூ.60 லட்சம் மோசடி: இளைஞா் கைது!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த இருவரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த வழக்கில், இளைஞா் ஒருவரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை க... மேலும் பார்க்க