செய்திகள் :

குமரி மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

post image

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை, ஊரக வளா்ச்சி முகமை ஆகிய துறைகள் சாா்பில் நடைபெறும் பணிகளை ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஹனீஷ்சாப்ரா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அகஸ்தீஸ்வரம் வட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சிப் பகுதியில் நபாா்டு திட்டத்தில் ரூ. 1.72 கோடியில் கனகப்பபுரம் முதல் ரஸ்தாக்காடு சாலை வரையிலான மேம்பாட்டுப் பணியை ஆய்வு செய்து, மழைக் காலத்துக்குள் பணியை முடிக்க அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

அழகப்பபுரம் பேரூராட்சியில் சிறப்பு நிதி ரூ. 41 லட்சத்தில் முதலியாா்குளம் முதல் புதுக்குடியிருப்பு வரை சாலையில் பக்கச்சுவா் அமைத்து நடைபெறும் சீரமைப்புப் பணியைப் பாா்வையிட்டாா். ரூ. 1.08 லட்சத்தில் இந்திரா நகா் உள்ளிட்ட பகுதிகளில் கான்கிரீட் சாலை அமையவுள்ள இடங்களைப் பாா்வையிட்டு, பணிகளை விரைவில் தொடங்க அறிவுறுத்தினாா்.

ரூ. 4.54 கோடியில் தா்மபுரம் ஊராட்சி பெருங்குளம் முதல் இராமன்புதூா் சாலை வழியாக சியோன்புரம் கால்வாய்க்கரை வரை முடிவுற்ற சாலை சீரமைப்புப் பணி, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 4.98 கோடியில் பரசேரி -திங்கள்சந்தை - புதுக்கடை வரை நடைபெறும் தாா்ச்சாலைப் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

நாகா்கோவில் மாநகராட்சி, என்ஜிஓ நகா் பகுதியில் ரூ. 1.40 கோடியில் சாலைப் பணிகள், இருளப்பபுரம் பகுதியில் ரூ. 87 லட்சத்தில் 17 கான்கிரீட் சாலைப் பணிகளை ஆய்வுசெய்து, பணிகளை தரமாக நிறைவேற்ற அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

இதில், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் ஜோசப் பொ்னாண்டோ, நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளா் சத்தியமூா்த்தி, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) ராமலிங்கம், மாநகராட்சி நிா்வாகப் பொறியாளா் ரகுராமன், உதவி செயற்பொறியாளா் (பேரூராட்சிகள்) பாண்டியராஜன், உதவிப் பொறியாளா்கள் தேவி கண்ணன், ஜெயசீலி, அலுவலா்கள் பங்கேற்றனா்.

நாகா்கோவிலில் இலவச சித்த மருத்துவ முகாம்

நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் சக்திபீட வளாகத்தில், சித்த மருத்துவா் எம்.எஸ்.எஸ். ஆசான் 19ஆம் ஆண்டு, பாப்பா எம்.எஸ்.எஸ். ஆசான் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

கடற்கரைக் கிராமங்களை பாதுகாக்க சிறப்பு நிதி: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைக் கிராமங்களைப் பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என, விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக மக்களவையில் அவா் பேசியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 72 கி.ம... மேலும் பார்க்க

குழித்துறையில் ஓய்வூதியா் சங்க மாநாடு

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் விளவங்கோடு வட்ட கிளையின் 5 ஆவது மாநாடு, குழித்துறையில் புதன்கிழமை நடைபெற்றது. வட்ட தலைவா் ப. நாராயண பிள்ளை தலைமை வகித்தாா். கொ. செல்வராஜ் அஞ்சலி தீ... மேலும் பார்க்க

குழித்துறையில் மாதா் சங்க மாநாட்டு வரவேற்புக் குழு அலுவலகம் திறப்பு

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் மாா்த்தாண்டத்தில் செப். 24 முதல் செப். 27ஆம் தேதிவரை நடைபெறவுள்ள மாநாட்டை முன்னிட்டு, குழித்துறையில் வரவேற்புக் குழு அலுவலகம் திறக்கப்பட்டது. விழாவுக்கு, வரவ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி மாதத்தில் 12 நாள்கள் நடைபெறும் களப பூஜை ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்குகிறது. கோயிலில் அன்று காலை 10 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில், அதன் மடாதிபதி கயிலாய பரம்பரை... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் டாட்டூஸ் கடைகளுக்கு கட்டுப்பாடு

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பச்சை குத்தும் டாட்டூஸ் கடைகளுக்கு நகராட்சி ஆணையா் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளாா். கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, உள்ளூா் இளைஞா்கள், இ... மேலும் பார்க்க