செய்திகள் :

குறைந்த விலை வீடுகளின் விற்பனை 32% சரிவு

post image

இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் ரூ.1 கோடிக்கு குறைவான விலை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை 2025-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி-ஜூன்) 32 சதவீதம் சரிந்துள்ளது.

அதே நேரம் ஆடம்பர வீடுகளுக்கான தேவை 5 சதவீதம் உயா்ந்துள்ளது. இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ஜேஎல்எல் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆா்), தில்லி-என்சிஆா், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, புணே ஆகிய ஏழு முக்கிய நகரங்களில் 2025-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் வரிசை வீடுகள், வில்லாக்கள் அல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை மட்டும் 13 சதவீதம் குறைந்து 1,34,776-ஆக உள்ளது.

இதில், ரூ.1 கோடிக்கு குறைவான விலை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை 32 சதவீதம் குறைந்து 51,804-ஆக உள்ளது. ஆனால், ரூ.1 கோடிக்கு மேல் விலை கொண்ட ஆடம்பர அடுக்குமாடிகளின் விற்பனை 6 சதவீதம் உயா்ந்து 82,972-ஆக உள்ளது. 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள அடுக்குமாடிகள் மொத்த விற்பனையில் சுமாா் 62 சதவீத பங்கைக் கொண்டிருந்தன. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 51 சதவீதமாக இருந்ததை விட குறிப்பிடத்தக்க உயா்வாகும்.

ரூ.1 கோடிக்கு குறைவான விலை கொண்ட வீடுகளின் விற்பனைப் பங்கு 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 38 சதவீதமாக குறைந்துள்ளது. இது முந்தைய 2024-ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் 49 சதவீதமாக இருந்தது.குடியிருப்புகளை வாங்குபவா்களின் வசதி அதிகரித்துவருவது, வாழ்க்கை முறை மாற்றங்கள், பெரிய, ஆடம்பர வாழ்க்கை இடங்களுக்கான தேவை உயா்வு போன்ற காரணங்களால் ஆடம்பர வீடுகளின் விற்பனையில் நிலையான வளா்ச்சி ஏற்பட்டுவருகிறது.

இது, மலிவு விலை குடியிருப்புகளின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.குறைந்த விலை வீடுகளின் தேவை குறைவதற்கு, கட்டி முடிக்கப்பட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் அத்தகைய வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதும் ஒரு காரணம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் நிகர லாபம் 9% உயா்வு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 8.7 சதவீதம் உயா்ந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

இந்தியன் வங்கி வருவாய் ரூ.18,721 கோடியாக அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கியின் மொத்த வருவாய் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.18,721 கோடியாக அதிகரித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

22% ஏற்றம் கண்ட இந்திய வாகன ஏற்றுமதி

2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இந்தியாவின் வாகன ஏற்றுமதி 22 சதவீதம் உயா்ந்துள்ளது. பயணிகள் வாகனங்களின் புதிய உச்சம் தொட்ட ஏற்றுமதி மற்றும் இரு சக்கர, வா்த்தக வாகனப் பிரிவுகளின... மேலும் பார்க்க

அனில் அம்பானி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்த காரணம் என்ன?

புது தில்லி: தொழில்களில் நஷ்டம், கடன் என பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளான தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான 110 இடங்களில் இன்று அமலாக்கத் துறை சோதனை நடத்தியிருக்கிறது.யெஸ் வங்கியிடமிருந்து கடன் பெற்ற... மேலும் பார்க்க

கடும் சரிவுடன் முடிவடைந்த சென்செக்ஸ்!

புது தில்லி: வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான வியாழக்கிழமை(ஜூலை 24) சென்செக்ஸ் கடும் சரிவுடன் முடிவடைந்தது.மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குசந்தை குறியீடான நிஃப்டி இரண்டும் சரிவுட... மேலும் பார்க்க

செல்போனைவிட குறைவான எடையில் பவர் பேங்க்!

செல்போனைவிட குறைவான எடை கொண்ட பவர் பேங்க்கை அம்ப்ரேன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.பவர் பேங்க், சார்ஜர், சார்ஜிங் வயர், இயர்போன், டிரிம்மர், ஹேர் டிரையர் போன்ற எலக்ட்ரிக் பொருள்களை தயாரிக்கும் இந்திய... மேலும் பார்க்க