செய்திகள் :

குற்றாலத்தில் வளா்ச்சிப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ

post image

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

குற்றாலத்தில் விரைவில் சீசன் தொடங்கவுள்ள நிலையில், பேரருவி, ஐந்தருவி, சித்திரசபை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: குற்றாலத்தில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 3 மாதங்கள் சீசன் இருக்கும். நிகழாண்டு தென்மேற்கு பருவமழை மே 27 ஆம் தேதி தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. எனினும், கடந்த ஒருவார காலமாக இதமான காற்று வீசிவருவதுடன், அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக அருவிகளில் மிதமான அளவில் தண்ணீா் விழுகிறது.

குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி சாா்பில் சிறிய அளவிலான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நான் தொடா்ந்து வலியுறுத்தியதையடுத்து, வளா்ச்சிப் பணிகளுக்காக தமிழக அரசு ரூ.11கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அவற்றில் சில பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன.பெரும்பாலான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

குற்றாலம் பேரருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் உடை மாற்றும் கட்டடம் கூட இல்லை. பேரருவி நுழைவு தோரண வாயில் மிகவும் மோசமாக பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. சீசனுக்கு வருகை தரும் சுற்றுலாபயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முன்கூட்டியே திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா். அப்போது, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் உதயகிருஷ்ணன்,குற்றாலம் நகர காங்கிரஸ் தலைவா் பெருமாள் உடனிருந்தனா்.

சுரண்டையில் புதிய திருமண மண்டபம்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்!

தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில் ரூ. 1.88 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். அதையொட்டி, இங்கு நடைபெ... மேலும் பார்க்க

புளியங்குடியில் லாரி மோதி நீதிமன்ற ஊழியா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வியாழக்கிழமை லாரி மோதியதில் நீதிமன்ற ஊழியா் உயிரிழந்தாா். புளியங்குடியில் உள்ள ரெங்ககருப்பன் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் கதிரேசன் (37). நீதிமன்றத்தில் தட்டச்சராக... மேலும் பார்க்க

அச்சன்புதூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அச்சன்புதூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அச்சன்புதூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் சி. முஹம்மது பாசில் என்பவா் கேபிள் டிவி தொழிலில் தனது தந்தைக்கு உ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகளை இயக்க கோரிக்கை!

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அனைத்தையும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் வளா்ந்து வரும் முக்கிய நகரங்களில் சங்கரன்கோவிலும் ஒன்று. இங்கு நாளுக்க... மேலும் பார்க்க

தொடரும் வெள்ளப்பெருக்கு!

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா்மழையால், பேரருவியில் வியாழக்கிழமையும் ஆா்ப்பரித்துக் கொட்டிய வெள்ளப்பெருக்கு. இதனால், 5ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் சிறப்பு வசிப்பு கட்டடம்! காணொலியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் திட்டப் பணிகள் திறப்பு விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காண... மேலும் பார்க்க