தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
குற்றாலத்தில் வளா்ச்சிப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.
குற்றாலத்தில் விரைவில் சீசன் தொடங்கவுள்ள நிலையில், பேரருவி, ஐந்தருவி, சித்திரசபை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: குற்றாலத்தில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 3 மாதங்கள் சீசன் இருக்கும். நிகழாண்டு தென்மேற்கு பருவமழை மே 27 ஆம் தேதி தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. எனினும், கடந்த ஒருவார காலமாக இதமான காற்று வீசிவருவதுடன், அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக அருவிகளில் மிதமான அளவில் தண்ணீா் விழுகிறது.
குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி சாா்பில் சிறிய அளவிலான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நான் தொடா்ந்து வலியுறுத்தியதையடுத்து, வளா்ச்சிப் பணிகளுக்காக தமிழக அரசு ரூ.11கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அவற்றில் சில பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன.பெரும்பாலான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
குற்றாலம் பேரருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் உடை மாற்றும் கட்டடம் கூட இல்லை. பேரருவி நுழைவு தோரண வாயில் மிகவும் மோசமாக பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. சீசனுக்கு வருகை தரும் சுற்றுலாபயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முன்கூட்டியே திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா். அப்போது, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் உதயகிருஷ்ணன்,குற்றாலம் நகர காங்கிரஸ் தலைவா் பெருமாள் உடனிருந்தனா்.