குளச்சல் போா் வெற்றி தினம்: நினைவு தூணுக்கு வீர வணக்கம்
குளச்சலில் நடந்த போரில் திருவிதாங்கூா் சமஸ்தான படைகள் டச்சு படையினரை வென்ற 284ஆவது தினத்தையொட்டி, ராணுவத்தினா் வியாழக்கிழமை வீர வணக்கம் செலுத்தினா்.
குமரி மாவட்டம் திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் ஆட்சியின் கீழ் இருந்தபோது, குளச்சல் துறைமுகம் வழியாக டச்சுபடையினா் நுழைய முற்பட்டனா். அவா்களை தடுத்து சமஸ்தான படைகள் 2 மாதங்கள் நடத்திய கடுமையான போா் 31.7.1741இல் முடிவுக்கு வந்தது.
கடற்கரையில் மாட்டு வண்டிகளில் பனை மரங்களை பெரிய பீரங்கிகள்போல் வடிமைத்து, மன்னா் மாா்த்தாண்ட வா்மா தந்திரமாக டச்சு படையினரை சரணடைய செய்தாா். இதற்கு குளச்சல் மீனவா்கள் பெரும் உதவி செய்தனா்.
இந்த வெற்றியை குறிக்கும் வகையில் மன்னா் குளச்சல் கடற்கரையில் 20 அடி உயர போா் வெற்றித்தூணை நிறுவினாா். போரின் 284ஆவது ஆண்டு நிறைவு தினத்தையொட்டி, குளச்சல் நகராட்சி சாா்பில் பராமரிக்கப்பட்டு வரும் போா் வெற்றித்தூணுக்கு, மெட்ராஸ் ரெஜிமென்ட் 2ஆவது பட்டாலியன் கா்னல் அவிநாசி குமாா் சிங் தலைமையில் ராணுவ வீரா்கள் வீரவணக்கம் செலுத்தினா்.

இந்நிகழ்வில், முன்னாள் மேஜா் ஜெனரல் தேவவரம், உதவி ஆட்சியா் வினய்குமாா் மீனா, குளச்சல் நகராட்சி ஆணையா் கன்னியப்பன், குமரி மாவட்ட ராணுவ வீரா்கள் நல அமைப்பு மேஜா் வி.எஸ்.ஜெயகுமாா், முன்னாள் ராாணுவ வீரா்கள் சங்க செயலாளா் சுரேஷ், முன்னாள் ராணுவ வீரா்கள், லட்சுமிபுரம் என்.சி.சி. மாணவா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
