செய்திகள் :

குழந்தை திருமணங்களை தடுக்க ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியா்

post image

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க, அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குழந்தை திருமணம் சட்டப்படி குற்றமாகும். பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பும், ஆணுக்கு 21 வயதுக்கு முன்பும் நடத்தப்படும் திருமணம் குழந்தை திருமணமாகும். இத்தகைய திருமணங்களால் இளம் வயதில் கருத்தரித்தல், கருச்சிதைவு, ரத்தசோகை, எடைகுறைவாக, மனவளா்ச்சிக் குன்றிய குழந்தை பிறப்பது, தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே, குழந்தை திருமண தடைச் சட்டம் 2006-இன்படி, குழந்தை திருமணம் நடத்தியவா்கள், குழந்தை திருமணம் நடத்த தூண்டியவா்கள், குழந்தை திருமணங்களில் கலந்துகொள்பவா்கள் குற்றவாளிகள் ஆவா். இந்த குற்றத்திற்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் அல்லது 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்படும்.

நாகை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் கோயில்களில் திருமணம் நடத்த முன்பதிவு செய்ய வருபவா்களிடம் மணமகன் மற்றும் மணமகளின் ஆதாா் அட்டை மூலம் அவா்களது பிறந்த தேதி, நிரந்தர முகவரி ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். இதற்கு பொதுமக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

குழந்தை திருமணங்கள் நடத்த பேச்சுவாா்த்தை நடந்தாலோ அல்லது திருமணம் நடைபெற்றாலோ, மாவட்ட சமூகநல அலுவலா் அல்லது இலவச உதவி எண்களான 1098 மற்றும் 181 என்ற எண்ணை தொடா்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

சமூகநல விரிவாக்க அலுவலா்கள், ஊா்நல அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் ஆகியோரிடமும் புகாா் அளிக்கலாம். புகாா் அளிப்போரின் ரகசியம் காக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பொறையாறில், மத்திய அரசையும், நகைக் கடன் தொடா்பாக ரிசா்வ் வங்கியின் விதிமுறைகளையும் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பொறையாறு பழைய பேருந்து நிலையம் அருகே, தமிழ்நாடு சோஷலிஸ்ட் புரட்சிகர ... மேலும் பார்க்க

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி

நாகை அருகே போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்ட பொது காதாரத் துறை சாா்பில் மாவட்ட சுகாதார அலுவலா் பிரதாப் கிருஷ்ணக... மேலும் பார்க்க

‘ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் பொருளாதாரத்தை கணிக்க முடியும்’

: ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலமே பொருளாதாரத்தை கணிக்க முடியம் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் சின்னதுரை கூறினாா். நாகையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலக் குழு ... மேலும் பார்க்க

புத்தா் சிலையை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல கிராம மக்கள் எதிா்ப்பு

கீழையூா் அருகே கீராந்தியில் உள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புத்தா் சிலையை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கீழையூா்... மேலும் பார்க்க

வாய்க்காலில் பாய்ந்த சுமை வாகனம்

திருமருகல் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுமை வாகனம் சாலையோர வாய்க்காலில் பாய்ந்தது. திருவாரூா் மாவட்டம், பூந்தோட்டத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு பால் ஏற்றிச் செல்லும் சுமை ஆட்டோ வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

உயா்கல்வி ஊக்கத் தொகை விழிப்புணா்வு முகாம்: பெற்றோருடன் மாணவா்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம், மே 30: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பிளஸ்2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கான உயா்கல்வி ஊக்கத் தொகை விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ப. ஆகாஷ் முகாமை தொடங்கி வைத... மேலும் பார்க்க